Tuesday, October 23, 2018

மோடி சொன்னாலும் ஆச்சர்யமில்லை . . .



பஞ்சாபில் நடந்தது துயரமான விபத்து.

அத்தனை உயிர்கள் பலியானதற்கு யார் காரணம் என்று பார்த்தால் அந்த இடத்தில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் ரயில் பாதை என்ற உணர்வே இல்லாமல் பொறுப்பற்று அங்கே அமர்ந்திருந்த மக்களையும்தான் சொல்ல முடியும்.

ஆனால் சங்கிகள் என்ன செய்தார்கள்?

"அந்த இரயிலின் ஓட்டுனர் பெயர் இம்தியாஸ் அலி.  இப்போது புரிகிறதா? இது விபத்தல்ல, மிகப் பெரிய சதி"

என்று கதை கட்டி அதி வேகமாக பரப்பவும் செய்து விட்டார்கள். இதெல்லாம்தான் சங்கிகளுக்கு கை வந்த கலை ஆயிற்றே!

குருமூர்த்தியும் கேடி ராகவனும் செய்த ஒரு இழி செயலைப் பற்றி சில தினங்கள் முன்பு பகிர்ந்து கொண்டது நினைவு இருக்கலாம்.

இந்த கதையை எப்போது பரப்பினார்கள் தெரியுமா?

அந்த இரயிலின் ஓட்டுனர் பெயர் அரவிந்த் குமார் என்று பல ஊடகங்கள் தெளிவாக அறிவித்த பின்புதான்.

கோட்ஸேவின் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தி அனுப்பிய கும்பல்தானே இது !

கொஞ்சம் அசந்திருந்தால் இந்த கதையை மோடியே பரப்பி இருப்பார். 

ஆம்.

அப்படிப்பட்ட வதந்தியை பரப்பிய பாவாத்மாதான் அது.

என்ன? எப்போது?

நினைவிலிருந்தால் சொல்லுங்கள்.

மாலை நான் சொல்கிறேன். 


26 comments:

  1. முத்தையா செல்வகுமார்October 23, 2018 at 11:17 AM

    "கோட்ஸேவின் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தி அனுப்பிய கும்பல்தானே இது !"
    .
    இதுக்கு மட்டும் ஆதாரம் தந்தீர்கள் என்றால் அந்த நிமிடம் முதல் நான் பாஜகவில் இருந்து வெளியேறி விடுவேன்

    நான் பார்ப்பனன் அல்ல.

    ReplyDelete
    Replies
    1. வரலாற்றை படியுங்கள் சார். ஆதாரம் கிடைக்கும். பாஜக விலிருந்து வெளியே வர வாழ்த்துக்கள்

      Delete
    2. எந்த வரலாற்று நூல்களிலும் காணமுடியாத செய்தி தான் நீங்கள் சொன்னது

      இஸ்லாமிய மதவெறியர்களையும் , சீனாவில் மழை பெய்தால் இந்தியாவில் குடை பிடிக்கும் சீன அடிவருடிகளை தவிர வேறு எவரும் சொல்லாத செய்தி

      அடலீஸ்ட் நேரு கூட சொல்லாத செய்தி

      Delete
    3. பாவம். உங்களுக்கு தெரியாவிட்டால் உண்மை இல்லாமல் போய் விடுமா என்ன?
      படேல் சிலையை ஏன்யா சீனாவில் செஞ்சீங்க?
      காவிக்கயவர்கள் தேச பக்தி பற்றியெல்லாம் பேசக் கூடாது

      Delete
    4. கோட்ஸே க்கு கேட்டால் எதுக்கு படேலுக்கு போறீங்க ? படேல் சிலைக்கு தனியாக ஒரு பதிவு போடுங்க
      .
      " உங்களுக்கு தெரியாவிட்டால் உண்மை இல்லாமல் போய் விடுமா என்ன?"
      .
      உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களேன் .. எந்த நூலில் படிச்சீங்க ?
      அது கூடவா உங்களுக்கு தெரியாதது

      Delete
    5. நீங்க தலை கீழாக நின்றாலும் இஸ்லாமிலுக்கு ஆதாரம் தர முடியாது . எனக்கும் பாஜக விட்டு போகவும் வாய்ப்பில்லை
      .
      ஒரு தகவல்
      என்னுடைய ஊர் ஒரு காலத்தில் திமுக ஆதரவு ஊராக இருந்ததது . இன்று முழுமையாக பாஜக ஆதரவு
      உங்க தோழர் மார்க்ஸ் அன்தோனிசாமி கூட நேரில் வந்து ஆய்வு வேற பண்ணினார்
      இத்தனைக்கும் அங்கே ஒரு பார்ப்பான் கூட இல்லை

      Delete
    6. ஓ! அந்த ரௌடிப்பசங்க ஊரா? சரி சரி. ஆதாரம் காண்பித்தால் கூட உங்களுக்கெல்லாம் புரிய வாய்ப்பில்லை.
      தந்தை பெரியார் எழுதியுள்ளார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பை படேல் தடை செய்யவும் அதுதான் காரணம்.
      சரி ராமன் பிறந்த இடம் என்று மசூதியை இடிச்சீங்களே, அங்கதான் ராமன் பிறந்தாருன்னு பர்த் சர்டிபிகேட் வச்சிருக்கீங்களா?

      Delete
    7. சீன அடிவருடி என்று எங்களை சொல்லும் காவிக்கயவர்களைக் கேட்டுத்தான் ஆக வேண்டும்.
      "படேல் சிலையை ஏன் சீனாவில் செய்தீர்கள்?"
      சீனப் பொருட்கள் இந்தியாவுக்கு வர வழிவகுத்தது வாஜ்பாய் என்பதாவது தெரியுமா?

      Delete
    8. ஈவேரா காந்தி சாகும் போது அங்கே இருந்தாரா ?
      கோட்ஸேயின் கையில் எதாவது இருந்ததாக பத்திரிகை செய்தி , கோர்ட் நீதி விசாரணையின் போது இருந்ததா ?
      கோர்ட் விசாரணை அறிக்கைகள் இன்றும் கூட உண்டு .. அதில் ஆதாரம் காட்டிட முடியுமா ?
      நேரு ஏதாவது சொல்லி இருக்காரா ?

      Delete
    9. சீன பொருட்கள் வருவது , வாங்குவது , நாங்கள் அவங்களுக்கு கொடுப்பது எல்லாம் வர்த்தக விடயங்கள்
      ஆனால்
      சீன போரின் போது சீனாவுக்கு ஆதரவாக இருப்போம் இந்தியாவை எதிர்ப்போம் என்று இந்தியாவில் இருந்தே சொல்ல கூடிய தேச துரோகிகள் கம்யூஸ்ட் கும்பலை தவிர வேறு யாருளர்

      Delete
    10. முத்தையா செல்வகுமார்October 25, 2018 at 10:59 AM

      RSS அமைப்பை தடை செய்ய காரணம்
      காந்தி கொலை
      அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை
      .
      நீங்கள் மிக கீழ்த்தரமாக திசை திருப்புகிண்றீர்கள்
      .
      கோட்ஸே கொலை செய்தார்
      அதை நான் மறுக்கவேயில்லை
      ஆனால்
      கோட்ஸே கையில் இஸ்மாயில் என்று பெயர் இருந்ததாக சொல்கின்றீர்கள். அதைத்தான் பொய் என்கின்றேன்
      .
      டென்ஷன் ஆகாமல் சிந்தித்து திசை திருப்பாமல் பதில் சொல்லுங்க,

      Delete
    11. முத்தையா செல்வகுமார்October 25, 2018 at 11:05 AM

      இதுதான் உண்மை

      https://www.outlookindia.com/website/story/why-exactly-did-godse-kill-gandhi/293200

      Delete
  2. நான் போட் ட கமெண்ட் இன்னும் வெளிவரலையே சார்

    ReplyDelete
  3. எந்த கமெண்ட்?
    வீடு திரும்பிய பின்பே பின்னூட்டத்தை வெளியிடுவதும்
    ஆபாச பின்னூட்டத்தை நீக்குவதும் நடக்கும்

    ReplyDelete
  4. கோட்ஸேவின் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தி அனுப்பிய கும்பல்தானே இது **** as usual this lie deliberately propagated by covert commie thugs and Italy devotees. Of course, no one expects a commie to tell truth or to be ever loyal to Bharath.

    ReplyDelete
  5. checked wikipedia: https://en.wikipedia.org/wiki/Nathuram_Godse (a secular website, a commie cannot dispute), it does not support your lie. Even a tamil version also (https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87) does not corroborate your blabber. More such deceptions forgeries can only be found in comrade websites or leftist history books.

    ReplyDelete
  6. ஏண்டா, பொய்யைப் பத்தி நீங்க பேசறீங்களா?
    சுதந்திரப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த துரோகிகள் நீங்கதாண்டா.
    உங்களை அம்பலப்படுத்தி எழுதின பதிவில எல்லாம் பதில் சொல்லாம
    ஏண்டா ஓலிஞ்சிக்கிட்ட?

    ReplyDelete
  7. கம்யூனிஸ்டுகளின் தேச பக்திக்கு தரகு நாய்களின் சான்றிதழ் அவசியமில்லை

    ReplyDelete
  8. மகாத்மா காந்தி இறந்து போன போது அவரைக் கொன்றது ஒரு இந்து என்று மீண்டும் மீண்டும் வானொலியில் அறிவித்தார்கள். அதற்குக் காரணம் கோட்சே தனது கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தி வந்ததுதான் என்று பல புத்தகங்களில் எழுதப்பட்டதை படித்துள்ளேன். ஆகவே பொய் சொல்ல நான் ஒன்றும் காவிக்கயவர்கள் போல இழி பிறவி அல்ல.

    ReplyDelete
  9. இவ்வளவு கேள்வி கேட்கிற ஆட்கள் இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ள முக்கியமான உண்மையான "ரயிலின் ஓட்டுனர் பெயர் இம்தியாஸ் அலி' என்று காவிகள் வதந்தி பரப்பியதைப் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை?

    ReplyDelete
  10. கான்பூர் ரயில் விபத்தைப் பற்றி மோடி அன்னிய நாட்டு சதி என்று பொய்ப்பிரச்சாரம் செய்தது பற்றி என்ன சொல்வார்கள்?

    ReplyDelete
  11. குருமூர்த்தியும் கேடி ராகவனும் செய்த பொய்கள் பற்றி எழுதிய பதிவிற்கும் பதில் சொல்லட்டும்.

    ReplyDelete
  12. சீனப் போரின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, போர் அவசியமில்லை, பேச்சு வார்த்தை நடத்துங்கள் என்று சொன்ன காரணத்திற்காக கைது செய்யப்பட்டார்கள். அதற்காக ஒரு பொய்ப்பிரச்சாரம் தொடர்ந்து நடந்து வருகிறது. அரசியல் அறியாதவர்களுக்கு ஒரு செய்தி.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரிந்ததை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. அதிருப்தியைத்தான் தெரிவித்தது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட. எழுபதுகளின் பிற்பகுதியில்தான் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு தொடர்பு வைத்துக் கொண்டது.

    ReplyDelete
  13. இந்த சங்கிங்களே இப்படித்தான்.
    நல்லா திட்டுங்க சார், திட்டுங்க.
    முக்கியமான பிரச்சினையிலிருந்து திசை திருப்பும் கேடிங்க.
    நீங்க கேட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்லாம அரைச்ச மாவையே அரைப்பாங்க பாருங்க

    ReplyDelete
  14. முத்தையா செல்வகுமார்October 26, 2018 at 7:02 AM

    "மகாத்மா காந்தி இறந்து போன போது அவரைக் கொன்றது ஒரு இந்து என்று மீண்டும் மீண்டும் வானொலியில் அறிவித்தார்கள். அதற்குக் காரணம் கோட்சே தனது கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தி வந்ததுதான் என்று பல புத்தகங்களில் எழுதப்பட்டதை படித்துள்ளேன். "


    புத்தகங்கள் என்று பொதுவாக சொல்லாதீர்கள்.. அன்று புத்தகங்கள் எல்லாம் சொந்த சரக்கில் எழுதப்படுபவை
    இன்று அப்படி எழுத முடியாதது .. ஆதாரத்துடன் கிழித்து விடுவார்கள்

    கோட்ஸே கூட போலீஸ் இல் பொய் சொல்லவில்லை . தன்னை ஆர் எஸ் எஸ் என்றே சொல்லி இருக்கின்றார் . அதை காந்தியின் மகன் தெளிவாக ஆதாரமாக சொல்லி இருக்கின்றார்

    போலீஸ் அறிக்கைகளில் கூட இஸ்மாயில் விடயம் இல்லை

    இதே விடயம் தொடர்பாக ஒரு முஸ்லீம் உங்கள் தோழர் மார்க்ஸ் அந்தோணிசாமியிடம் கேட் ட போது ஆதாரம் இல்லாத தகவல் என்று சொன்னார் . எங்கள் ஊரில்

    நீங்கள் கூட மார்க்ஸ் அந்தோணிசாமியிடம் முகநூல் மூலம் கேட்டு அறிந்து கொள்ளலாம்

    ReplyDelete
  15. முத்தையா செல்வகுமார்October 26, 2018 at 7:07 AM

    "கான்பூர் ரயில் விபத்தைப் பற்றி மோடி அன்னிய நாட்டு சதி என்று பொய்ப்பிரச்சாரம் செய்தது பற்றி என்ன சொல்வார்கள்?"

    மோசமான அரசியல் சித்து வேலை
    கண்டிக்கின்றேன்

    நான் ஒன்னும் அராபிய அடிமையோ அல்லது கம்யூனிச வாதியோ கிடையாது . தலைமை செய்யும் தவறுகளுக்கு முட்டு கொடுத்து கொண்டு இருக்க

    என்றாவது ஒரு முஸ்லீம் அல்லது கம்யூனிஸ்ட் தலைமையின் தவறை விமர்சித்து இருக்கானா

    நான் கண்டிக்கின்றேன்
    அந்த விபத்தில் அரசியல் பண்ணனும் பாஜக தலைமைகளை கண்டிக்கின்றேன்

    ReplyDelete