Tuesday, July 29, 2014

வேலூர் வீரனுக்கு வாழ்த்துக்கள்



இங்கிலாந்தின் க்ளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 77 கிலோ பளு தூக்கும் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ள சதீஷ் சிவலிங்கம் எங்கள் வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் என்பது மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது.

சத்துவாச்சாரி பகுதி பளு தூக்கும்  போட்டிகளில் கடந்த பல ஆண்டுகளாக ஆசிய விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல சர்வதேச போட்டிகளில் வெற்றி வீரர்களை உருவாக்கியுள்ளது.

எளிய குடும்பத்தில் பிறந்தாலும் கடினமான உழைப்பால் வெற்றிகளை ஈட்ட முடியும் என்பதை நிரூபித்துள்ள சதீஷிற்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். 


2 comments:

  1. சதீஸுக்கு எமது வாழ்த்துக்களும்,,,,
    அன்புடன்
    Killergee
    www.killergee.blogspot.com

    ReplyDelete
  2. this type of writing is highly appreciable! well done!!

    ReplyDelete