Tuesday, July 1, 2014

இந்த மாண்புமிகு எம்.பி க்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?



இன்றும் ஒரு மாண்புமிகு மக்களவை உறுப்பினரைப் பற்றி  எழுத வேண்டியிருக்கிறது. 

தீதி மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மேதகு தபஸ் பால் என்பவர் தனது தொண்டர்கள் கூட்டத்தில் "மார்க்சிஸ்ட் கட்சியினர் யாராவது தன்னிடம் வம்பு செய்தால் அவர்களை  நான் கொன்று விடுவேன். அதற்காகத்தான் நான்  கையில் துப்பாக்கி வைத்துள்ளேன். அவர்களின் வம்சத்தையே  அழித்து விடுவேன். என் கட்சி பையன்களை  அனுப்பி மார்க்சிஸ்ட் கட்சி பெண்களை கற்பழித்து விடுவேன்" என்று கொக்கரித்துள்ளார். 

பாலியல் கொடுமைக்கு உள்ளான பெண்கள் மீதே களங்கம் கற்பித்த மம்தாவிற்கு இதெல்லாம் பெரிய விஷயமாகவே இருக்காது. ஆனால் வெறும் அடியாட்களாகவும் ரௌடிகளாகவும் மட்டும் தெருநாய்களாக திரிந்து வருகிற (இந்த வார்த்தை கடுமையாகத்தான் உள்ளது, ஆனால் அதுதானே உண்மை!) திரிணாமுல் கட்சிக்காரர்கள் தலைவன் சொன்னதை அமலாக்க கிளம்பி விடுவார்கள் என்பதுதான் வருத்தமளிக்கும் உண்மை.

இந்த மனிதனுக்கு  என்ன தண்டனை அளிக்கலாம் என்று சொல்லுங்கள்..

முதற்கட்டமாக பதவியை பறிக்க வேண்டும். அதற்கும் முன்பாக அவன் கையில் இருக்கிற துப்பாக்கியை பறிக்க வேண்டும். 

2 comments:

  1. தண்டனை வழங்கியே தீர வேண்டும்

    ReplyDelete
  2. ஒரு mp பேசுற பேச்சா இது ?

    ReplyDelete