Thursday, July 17, 2014

உங்களுக்கு “பாகல் ரத்னா” விருது வேண்டுமா?



கடந்த காலத்தை மறந்து விடுங்கள். வளர்ச்சியின் நாயகன் மோடி இந்தியாவின் வளர்ச்சியைத் தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திக்க மாட்டார் என்று அப்பாவித்தனமாக நம்பி ஏமாந்து வாக்களித்து, ஏன் மோடிக்கு வாக்களிக்கக் கூடாது என்று விதண்டாவாதம் பேசிய என் இனிய இந்திய மக்களே,

காஸாவில் இஸ்ரேல் நிகழ்த்தும் அராஜகத் தாக்குதலைக் கண்டித்தால் அவர்கள் மனம் வருத்தப்படும் என்று அழிவு சக்திக்கு ஆதரவு சொல்கிற,

சமஸ்கிருத வாரம் கொண்டாடுங்கள் என்று கட்டளையிடுகிற,

ஹிந்தித் திணிப்பை தொடங்கியிருக்கிற, 

காங்கிரஸ் கட்சியின் அதே முதலாளிகளுக்கு அடிபணிகிற கொள்கையை தொடர்கின்ற,

பாரதீய ஜனதா கட்சி மாறி விட்டது, மோடி அரசு சாதாரண மக்களுக்கு நன்மை செய்யும் என்று இன்னும் நம்பிக்கொண்டு இருக்கிறீர்களா? 

அப்படியென்றால் “ பாகல்  ரத்னா“ விருது பெற நீங்கள்தான் தகுதியானவர்.  

மோடி அரசிடமிருந்து அழைப்பு வரும். காத்திருங்கள்.

பின். குறிப்பு : தமிழில் இளிச்சவாயன் என்று சொன்னால்தான் கோபம் வரும். ஆகவே விருதின் பெயரை ஹிந்தியில் வைக்கப் போகிறார்களாம்.

3 comments:

  1. யாரையாவது குறை சொல்லிகிட்டே இருக்கணும்....

    ReplyDelete
  2. உண்மையைத்தானே சொல்றேன் சார்!

    ReplyDelete
  3. Yes i agree with you. Modi cheating whole india. Nimalan chennai

    ReplyDelete