Saturday, July 12, 2014

படேல் சிலைக்கு பழைய இரும்பு - இருநூறு கோடி ரூபாய் எள்.




"பகைவனுக்கருள்வாய்  நெஞ்சே" என்பது போல காந்தியைக் கொன்ற காரணத்தால் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தடை  செய்த முதல் உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல் மீது மோடி தேர்தல் காலத்தில் பாச மழை பொழிந்தார். பொய்களை வேறு அள்ளி வீசினார்.  உலகிலேயே மிக்ப் பெரிய இரும்பு சிலை வைக்கப் போவதாகவும் ராமர் கோயில் கட்ட செங்கல் வசூலித்தது போல பழைய இரும்பு வசூல் செய்யப் போவதாக சொன்னார்.

இப்போது அந்த சிலை செய்வதற்காக மத்திய பட்ஜெட்டில் இருநூறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏன் ஊட்க மாயையால் வாக்குகளை திரட்ட முடிந்த மோடியால் பழைய இரும்பை திரட்ட முடியவில்லையா? இவரது தனிப்பட்ட ஆசைக்காக மத்திய அரசின் கஜானாவில் கை வைப்பது என்ன நியாயம்? 

காங்கிரஸ் கட்சியில் காந்தி, நேருவை விட படேல்தான் பெரிய தலைவர் என்று நிரூபிக்க விரும்பும் மோடியின் ஆசைக்கு மக்கள் பணம் இருநூறு கோடி ரூபாய் எள்.

4 comments:

  1. எள்ளு கொள்ளில் எல்லாம் தோழர்களுக்கு நம்பிக்கை வந்திருக்கிறது.எனக்கு என் மாநிலத்தை சேர்ந்த காமராஜர் காந்தி நேருவைவிட பெரிய தலைவர் என்றால் மோடிக்கு அவர் மாநிலத்தை சேர்ந்த படேல் ஹீரோ.படேலுக்கு சிலை வைக்காமல் சொந்த கட்சி தொண்டனை கொல்லற சூ என் லாய்க்கும் ;மா சே துங்குக்குமா சிலை வைக்க முடியும்.இனி நீங்க ஆரம்பிக்க தோழரே இதுக்கெல்லாம் பதில் சொல்லாமல் சம்பந்தமில்லாமல் பேத்துகிறார் தரகு புயல் என்று.1969-இலிருந்து இந்திரா குடும்பத்துக்கும் சீனாவிற்கும் நீங்க அடிக்கிற ஜால்ராவை யாரும் பீட் அடிக்க முடியாது.

    ReplyDelete
  2. விஜயன் சார் சொன்னால் உங்களுக்கு கோபம் வருகிறது. ஆனால் நீங்கள் எழுதியுள்ளது அபத்தம் என்று உங்களுக்கே புரியவில்லையா? மக்கள் பணம் விரயமாகிறது என்பதைக் குறிக்க எள் என்று சொல்வது காலம்காலமாக பழக்கத்தில் உள்ளது. இதற்கும் தோழர்களின் நம்பிக்கைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. படேலுக்கு வானம் வரைக்கும் சிலை வைக்கட்டும். அதற்கு எதுக்கு சார் மக்கள் பணம் 200 கோடி ரூபாய்?

    என் வலைப்ப்க்கத்திற்கு வந்து வன்மம் கக்கும் விஜயன் அவர்களுக்கு சிலை வைக்க நான் விரும்பினால் அதை நான் பணத்திலிருந்தோ, இல்லை என் அப்பா வைத்து விட்டுப் போன சொத்திலிருந்துதான் வைக்க வேண்டும். ஊரார் பணத்தையா எடுக்க முடியும்?

    சொந்த கட்சித் தலைவர் ஹிரேண் பாண்டியாவை கொன்றது யார் என்று சொல்லுங்கள். அதன் பிறகு உங்கள் கேள்விக்கு பதில் சொல்கிறேன்.

    நேரு குடும்பத்திற்கு ஜால்ரா என்று சொல்வது நல்ல நகைச்சுவை. அவசரநிலைக்காலத்தில் அதிகமாக கைது செய்யப்பட்டவர்கள் மார்க்சிஸ்டுகள். ராஜீவ் காந்தியே ராஜினாமா செய் என்ற முழக்கத்தை வைத்தவர்களும் நாங்கள்தான்.

    தவறான வரலாறு என்பதுதான் உங்கள் பாரம்பரியமாயிற்றே!

    தரகுப்புயலை நான் மறந்தாலும் நீங்கள் மறக்கமாட்டீர்கள் போலும். He Deserves Blast. I will never spare that unethical man.

    உங்க பக்கத்திலயும் உங்க அறிவார்ந்த கருத்துக்களை அள்ளி விடுங்க சார். அப்பதான் உங்களை மாதிரியே நானும் அபத்தமா உளறிட்டுப் போவேன்

    ReplyDelete
  3. Thambi deposit kaliyanathu maranthurucha?

    ReplyDelete
  4. ஏலே கோழை, நீயெல்லாம் எனக்கு அண்ணனா? ஓடிப் போயிடு

    ReplyDelete