Thursday, July 31, 2014

போலிச்சாமியார் நித்தியானாந்தாவின் வாய்க்கொழுப்பு





காமுகன், பணத்தாசை பிடித்தவன், பெண்களை மோக வலையில் வீழ்த்தி அவர்களின் வாழ்வை சூறையாடிய கேவலமான ஜென்மம், கடவுள் பெயரைச் சொல்லி பக்தர்களை ஏமாற்றும் கபட சன்யாசி, பக்தர்கள் தொடங்கி மதுரை ஆதீனம் வரை மோசடி செய்த திருட்டுப் பேர்வழி, மனிதன் என்று சொல்லக் கூட அருகதையற்ற கீழ்த்தரமான நித்தியானந்தா கம்யூனிஸ்டுகளை குறை சொல்லி இருக்கிறான்.

தேசத்திற்காகவும் மக்களுக்காகவும் தங்களின் உயிரையும் துச்சமெனக் கருதி போராடும் தியாகத்தீயில் புடம் போட்ட கம்யூனிஸ்டுகளைப் பற்றி இந்த புடலங்காய் சாமியாருக்கு என்ன தெரியும்?

இவன் சொன்னதையும் ஒரு செய்தி என்று ஒரு பத்திரிக்கை வெளியிடுகிறதே, அதை என்ன சொல்வது?

இவனது லீலா வினோதங்கள் வெளியானதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மற்ற வெகுஜன அமைப்புக்களின் தோழர்கள் இவனை திருவண்ணாமலையில் துரத்தி அடித்தது மறந்து போய் விட்டது போலும்.

பணம் கொடுத்து இவன் மற்றவர்களை விலைக்கு வாங்கியிருக்கலாம். ஆனால் இவன் ஜாலமெல்லாம் எங்களிடம் எடுபடாது.

மறுபடியும் திருவண்ணாமலையில் கால் வைத்துப் பார்க்கட்டும். அப்போது எங்கள் தோழர்கள் அவனுக்கு மீண்டும் பாடம் புகட்டுவார்கள்.

காவிக்கட்சி ஆட்சிக்கு வந்ததால் இந்த காலிக்கும் தைரியம் வந்து விட்டது போல.

ஐம்புலன்களையும் அடக்குபவர்கள்தான் துறவிகள் என்று சொல்வார்கள். இப்போது சாமியார்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் யாரும் அப்படிப்பட்ட ஆசாமிகள் கிடையாது. அதிலும் இவன்தான் மிகப் பெரிய போலியாயிற்றே. அதனால்தான் இவனால் இப்போது நாவையும் அடக்க முடியவில்லை.

8 comments:

  1. தியாகத்தீயில் புடம் போட்ட கம்யூனிஸ்டுகளைப் -
    Adra sakka Adra sakka Adra sakka!!!

    ReplyDelete
  2. நித்யானந்தாவின் லீலைகள் எல்லாம் வெளியான பிறகும்
    அவரைக் பாராட்ட, பூஜிக்க ஒரு கூட்டம்
    தயாராக இருப்பது வருத்தமளிக்கிறது
    நண்பரே

    ReplyDelete
  3. உண்மைதான் நண்பர் ஜெயக்குமார் அவர்களே

    ReplyDelete
  4. அனானி, நீ வேணாம் வேணாம் நீங்க என்ன சொல்ல வரீங்க?

    ReplyDelete
  5. no. one criminal. he has to punish like pramenantha . but due to money and political power he is blessing others still. shame to our law and order.

    Seshan/Dubai

    ReplyDelete
  6. sir,
    andha an(aani) naan illey? but neenga sonna seidhiyla- onnu(m) puriyavilley?
    appadi andha samsaari/saamiyar "kamredu pathi" yenna sonnar?

    ReplyDelete
  7. என்னைப்பொருத்தவரை நித்யானந்தாவை விட அவனது பின்னால் இன்றும் நிற்கும் கூட்டங்கள்தான் சமூகவிரோதிகள்.

    ReplyDelete