Friday, July 4, 2014

கேப்டனோட ஓண்டிக்கு ஒண்டி சண்டைதானே த.அ.ம ஐயா?





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9VbCNoTpopPOCLBdyPKJqH7Ze3MkIMYv6EpIxoMihjNioIlmMXrWsf3VgtXHxbddepMq5YycbttjB7_VqLdoheKjtVK9fNZgytt_oaY8rF_LW-Vgguvtl6NIof3FBsbJYwRQFcW6AEHJi/s1600/hqdefault.jpg

தேமுதிக நிர்வாகி தனக்கு கொலை மிரட்டல் விட்டதாக தரகுப்புயல் பொய்யருவி மணியனின் உணர்ச்சிகர பேட்டியை ஜூனியர் விகடனில் படித்தேன். சிரித்தேன். அதிலே சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் இவரோடு விஜயகாந்த் போட்டியிட்டு இவரை விட ஒரு வாக்காவது அதிகம் பெற்று விட்டால் தமிழக அரசியலிலிருந்தே விலகி விடுவதாகவும் அறிவித்துள்ளார்.

தேரில் அலங்காரத்திற்காக கட்டப்பட்ட பொம்மைகள் தாங்கள்தான் அந்த தேரையே தாங்குவதாக நினைத்துக் கொள்ளும். அது போல தன்னை மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக நினைக்கத் தொடங்கி விட்டார் தமிழருவி மணியன். கட்சிகளுக்கு இடையே தரகு பார்த்ததால் அந்த கட்சிகளை விட தான் மிகப் பெரிய மனிதன் என்ற மிதப்பு வந்து விட்டது.

கேப்டன் இந்த போட்டிக்கு அவசியம் ஒப்புக் கொள்ளுங்கள். நம்ம தரகுப்புயல் உங்களை வெற்றி பெறச் சொல்லவில்லை, அவரை விட ஒரு ஓட்டு அதிகம் வாங்கச் சொல்கிறார். த.அ.ம வை அரசியலில் இருந்து துரத்த இதை விட வேறு வாய்ப்பு கிடையாது. தன்மானச் சிங்கம் அவர், கண்டிப்பாக அரசியல் துறவறம் வாங்கி இலக்கிய வியாபாரம் நடத்தப் போய் விடுவார்.

சரி த.அ.ம ஐயா நீங்க கேபடனோட ஓண்டிக்கு ஒண்டி சண்டை தானே போடப் போறீங்க. தேமுதிக Vs காந்திய மக்கள் இயக்கம் மட்டும்தானே? உங்களுடைய தரகால் பயனடைந்த (!) பாஜக, பாமக, மதிமுக இவங்கள்ளாம் உங்களூக்கு ஆதரவா வர மாட்டாங்களே..

இவர்களால உங்களுக்கு பெரிசா ஓட்டு எதுவும் விழாது என்றாலும் இவர்கள் எல்லாம் வந்து விட்டால் போட்டியில் சுவாரஸ்யம் இருக்காது. அதனால கேப்டனோட ஓண்டிக்கு ஒண்டி சண்டை போடுங்க

அதனால கேப்டனோட ஓண்டிக்கு ஒண்டி சண்டை போடுங்க

No comments:

Post a Comment