Thursday, July 24, 2014

அத்வானியே கண்டித்த அயோக்கியத்தனம்.



நேற்று முன் தினம் டெல்லியில் உள்ள மகாராஷ்டிர மாநில இல்லத்தில் சிவசேனை எம்.பிக்கள் நடந்து கொண்ட அராஜகமான முறையை வெங்காய நாயுடு போன்ற பாஜக அமைச்சர்கள் நியாயப் படுத்திய அதே வேளையில் பாஜக வின் தீவிர இந்துத்துவ அடையாளமாக இது நாள் வரை இருந்த அத்வானி கண்டித்துள்ளார்.

மோடியால் ஒதுக்கி வைக்கப்பட்ட காரணத்தால் கூட அவர் தனது கண்டனத்தை தெரிவித்திருக்கலாம். ஆனால் அவரே கண்டித்தார் என்றால் சிவசேனை ஆட்கள் செய்தது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

என்ன செய்வது சிவசேனைக் கட்சியும் திரிணாமுல் காங்கிரசும் ரௌடிகளை மட்டுமே கொண்டது… மகாராஷ்டிர மக்களும் மேற்கு வங்க மக்களும் ரௌடிகளை எம்.பி யாக்கினால் அவர்கள் அராஜகம் நிகழ்த்தாமல் அமைதியையா வளர்ப்பார்கள்?

No comments:

Post a Comment