Wednesday, July 30, 2014

ஒட்டு கேட்டாங்களா? கேட்கலயா?

 http://images.indiatvnews.com/politicsnational/Nitin_Gadkari_r7923.jpg
மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வீட்டில் ஒட்டு கேட்டு உளவு பார்த்தார்களா? பார்க்கவில்லையா?

அப்படியெல்லாம் எதுவும் நடக்கவே இல்லை என்று அலறுகிறார் கட்காரி. இல்லையில்லை ஒட்டு கேட்கப்பட்டது என்று அடித்துச் சொல்கிறது காங்கிரஸ் கட்சி. வேறு பிழைப்பில்லாமல் பொய் சொல்கிறது காங்கிரஸ் கட்சி என்று  பாரதீய ஜனதா அரசு பரிதாபமாக பேசுகிறது. 

"அந்த குழந்தையே நீங்கதான் சார்" என்பது போல காங்கிரஸ் ஆட்சியில் அக்டோபர் மாதத்தில்தான் ஒட்டு கேட்கும் கருவியே பொருத்தப்பட்டது என்று ஆதாரம் காட்டிச் சொல்கிறார் சர்வதேச கோமாளி சுப்ரமணிய சுவாமி. "நானே சும்மா இருக்கேன், இவன் எதுக்கு ஏழரையை கூட்டறான்" என்று தவிக்கிறார் கட்காரி.

சொல்லுங்க சார் சொல்லுங்க,
நிஜமா சொல்லுங்க, என்னதான் நடக்குது இங்கே?

நீங்க எதுவும் சொல்லவில்லையென்றால் 

அமெரிக்கா ஒட்டு கேட்டது, அதனால்தான் வெளியே சொல்ல பயப்படுகிறது பாரதீய ஜனதா 

என்றோ

மோடியே தன் அமைச்சர்களை ஒட்டு கேட்பதை எப்படிய்யா நான் வெளியே சொல்வது என்று கட்காரி பயப்படுகிறார்

என்றோ

நானும் இந்த நாட்டு மக்களும் கற்பனை செய்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது அல்லவா?

அதனால்தான் கேட்கிறேன்

ஒட்டு கேட்டாங்களா? கேட்கலயா?

1 comment:

  1. yenna kaiya pudichi iluthiya? comedy continued....

    ReplyDelete