Tuesday, January 22, 2019

திரிபுராவிலிருந்து திருநெல்வேலி . . .



களைகள் பரந்து வளர்ந்தால்
பயிர்கள்தான் நீக்கப்படும்.
பாவிகளின் ராஜ்ஜியத்தில்
புனிதர்களுக்கு இடமேது?

பொய்களின் பிம்பங்களுக்கு
புரட்சியும் புரியாது,
தியாகமும் தெரியாது.

கட்டுக்கதை பரப்பிக் கொண்டு
காட்டிக் கொடுக்கும் துரோகிகளுக்கு
வரலாறும் கிடையாது,
வாழ்வில் கொள்கையும் கிடையாது.

ஆட்சிப் பொறுப்பின் ஆணவத்தால்
அகற்றப்பட்டவர்
இன்று மீண்டும் எழுகிறார்.

"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
என்ற  என்றென்றும்
தேவைப்படும் தத்துவத்தை
முதலில் சாதித்தவரை
திரிபுராவில் வீழ்த்தியதாய்
நினைத்தார்கள்,
திருநெல்வேலியில் மீண்டு
வருகிறார் கம்பீரமாய் . . .

உயிரோடிருந்தால் 
பாரதி பாடியிருப்பான்
“ஆஹாவென்று எழுகிறது
யுகப் புரட்சி நாயகனின் சிலை”


1 comment: