Monday, January 13, 2014

குறுஞ்செய்திகளின் பாதிப்புக்களை தாண்டியும்






ஆதர்ஸ நாயகன், பக்கத்தில் நாயகி,
பனி படர்ந்த மலைச்சிகரம்,
பசுமை போர்த்திய வயல்வெளி,
மின்னுகிற நதியலைகள்
என ஏதோ ஓர்
அழகு சொட்டும் இயற்கைக் காட்சி,
சோறிடும் உழவன்
கையில் ஏரோடு,
கம்பீரமாய் காளைகள்,
பொங்கும் பாலோடு
பல வண்ணப் பானைகள்,
நாவுக்கு இனிய
கரும்புகள் தோகையோடு,
பார்த்தாலே நறுமணம் தரும்
மஞ்சள் கொத்துக்கள்,
புள்ளி வைத்தும் வைக்காமலும்
எழில் சிந்தும் கோலங்கள்
என்று வலம் வந்த
அச்சடித்த அட்டைகள்
கால வெள்ளத்தின் வேகத்தில்
காணாமல் போனால் என்ன?
குறுஞ்செய்தியாய் சுருங்கினால் என்ன?
அன்பைப் பறிமாறும்
நேசம் மிக்க இதயம் ஒன்று
என்றென்றும் சொல்லும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்”  

2 comments:

  1. உங்களுக்கும் மனம்நிறைந்த பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. தித்திக்கும் தமிழர் புத்தாண்டு +தைப் பொங்கல் வாழ்த்துக்கள் சகோதரா
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இவ்வாண்டு
    மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக மலரட்டும் !

    ReplyDelete