Friday, January 3, 2014

குட் பை மன்மோகன். மறக்கவோ மன்னிக்கவோ முடியாதவர் நீர்

 http://revolutionaryfrontlines.files.wordpress.com/2010/07/manmohan-chidambaram1.jpg

மூன்றாவது முறையாக பிரதமர் பதவிக்கு போட்டியிட மாட்டேன்
என்று மன்மோகன்சிங் அறிவித்து விட்டார். 

நல்ல கற்பனை வளமய்யா உங்களுக்கு.

ஏதோ அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு
இடங்களில்  காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று உங்களுக்கு தங்கத்
தட்டில் வெற்றிலை பாக்கு பழம் வைத்து" வாப்பா மகராசா, நீங்கதான்
மறுபடியும் பிரதமராக வேண்டும்" என்று அழைப்பது போல அல்லவா
உங்கள் நினைப்பு இருக்கிறது.

ஆக மகராசனா வீட்டுக்கு போயிடுங்க, உங்களையோ, இல்லை
உங்க காங்கிரஸ் கட்சியையோ போய்ட்டு வாங்க னு கூட 
யாரும் சொல்ல மாட்டாங்க.

ஆனா உங்களை யாரும் மறக்கவே மாட்டாங்க,

எப்படி மறக்க முடியும்?

இதுவரைக்கும் இருந்ததிலேயே உங்கள மாதிரி மோசமான ஒரு பிரதமர
நாங்க பார்த்ததே கிடையாதே.

எல்லா விஷயத்துலயும் சாதனை படைச்ச ஆளாச்சே?

அமெரிக்கா கிட்ட அடிமையா இருக்கறதுல, ஊழல் தொகையை
அதிகரிச்சுதல, மக்களை கடுமையா படுத்தி எடுத்ததில உங்களுக்கு
நிகர் வேற யாருமே கிடையாதே! உங்களை எப்படி மறக்க முடியும்?

மன்னிக்கவும் முடியாது.

இடதுசாரிகளின் ஆதரவோடு பதவிக்கு வந்துட்டு அவங்க ஆதரவ
விலக்கினதும் " இப்பதான் இரும்பு விலங்க அவிழ்த்து விட்டு 
சுதந்திரமா இருக்கேன்" னு சொன்ன வெட்கம் கெட்ட மனுசனய்யா நீர்.

ரிடையர் ஆனதுக்கு அப்புறமா அமெரிக்காவுக்கே ஓடிப் போயிடுங்க.

சுதந்திரத்துக்காக உயிரைக் கொடுத்த பகத்சிங் வாழ்ந்த பஞ்சாப்புக்கு
மட்டும்  போகவே போயிடாதீங்க. அப்படியே உங்க கூட்டாளி 
சிதம்பரத்தையும் கூட்டிக்கிட்டு போயிடுங்க. அவரும் தமிழ்நாட்டில
கால் வைக்கறதுக்கு அருகதை இல்லாத மனுசந்தான்.

2 comments:

  1. ஏன் அமெரிக்கா மேல இந்த கொலை வெறி ?

    ReplyDelete
  2. மன்மோகன் சிங் பேசியதில் ஒன்று மட்டும் புரியவில்லை..

    " பணவீக்கம் கவலை அளிக்கிறது அதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்"

    இனி நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டா என்ன ....

    ReplyDelete