Monday, August 22, 2011

அண்ணா ஹசாராவிற்கும் சர்ச்சை சாமியார் ரவிசங்கருக்கும் என்ன தொடர்பு?



உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும்  அண்ணா   ஹசாரேவுடன்
பேச்சுவார்த்தை நடத்த  சர்ச்சை சாமியாரும்  பிஜேபி சித்தாந்தங்களை
அவ்வப்போது  தனது உபதேசங்களில் அள்ளித் தெளிக்கும் 
ரவிசங்கரது  உதவியை மத்திய  அரசு நாடியுள்ளது. அவரும் விரைவில்
நல்ல செய்தி வரும் என்று  அருள் வாக்கு கூறியுள்ளார்.


அண்ணா ஹசாரே வின் சகாக்கள்  எல்லாமே  சாமியார்கள்  என்ற
பெயரில் பிழைப்பு  நடத்துபவர்கள்தான் போலும். 


ஊழல்களின் ஊற்றுக்கண்ணாக விளங்கும்  பெரும் வணிக 
நிறுவனங்கள்  அளிக்கும் நிதி கொண்டு போராட்டம்  
நடத்தும்   அண்ணா  ஹசாரே   மீது  எனக்கு பெரிய மதிப்பு
கிடையாது. 
சாமியார்கள்   மோசடி பற்றியும் அவர் பேச மாட்டார் 
என்பது  உறுதி. 
அவரது போராட்டத்தின்  பின் ஏதோ  ஒரு மர்மம் 
ஒளிந்திருப்பதாகவே  தோன்றுகின்றது. அதுவும் 
ஒரு  நாள்  நிச்சயம்  வெளி வரும்.


பிம்பங்கள் உடைபட்ட எத்தனையோ புனிதர்களை
பார்த்த தேசம்  இது! இவரது பிம்பம்  தகரும் 
நாளையும்  விரைவில்   எதிர்பார்க்கலாம்
  

No comments:

Post a Comment