Thursday, August 11, 2011

சமச்சீர் கல்வி - சமச்சீராய் நன்றிகள் பல

இரண்டு மாதம் தூங்கி வழிந்த
புத்தகங்கள் கையிலே  புரள 
பக்கங்களோடு  கண்களும் விரிய
நன்றி சொல்ல  வேண்டும் - 
யாருக்கு?
பாடங்களுக்கு  ஊடாக  தன்
படங்களை பொருத்தியவர்க்கா?
முன்பிருந்தவர் எழுதிய எழுத்தெல்லாம்
முனைப்புடனே அழிக்க முயல்பவர்க்கா?  
குறுகிய காலத்தில்  குறைவில்லா தீர்ப்பை
நிறைவாய்  தந்த நீதியசரர்க்கா?
கோபமுற்ற  காவலரிடம் 
பிரம்படிகள்  வாங்கியும் 
சிவப்புக் கொடியேந்தி 
சிவந்த கண்களோடு 
போராடியவர்க்கா? 
தயக்கமின்றி  சொல்வேன்
நன்றிகள்  பல ........
(நீதி) அரசரோடு 
அடிகள் வாங்கியவர்க்கும்.... 


படைப்பு  -  மதுரை  பாரதி

No comments:

Post a Comment