Saturday, August 20, 2011

மகத்தான தலைவனுக்கு அஞ்சலி



சி.ஐ.டி.யு  சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும் 
மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு 
உறுப்பினருமான  தோழர் எம்.கே.பாந்தே  இன்று 
காலமானார் என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. 
சிறந்த தொழிற்சங்கவாதி, பொருளாதார அறிஞரான 
தோழர் பாந்தேவின் மறைவு  உழைக்கும் மக்களுக்கு
மிகப் பெரும் இழப்பு. 


தெளிந்த நீரோடை போன்று  ஆணித்தரமாக தனது
கருத்துக்களை முன் வைப்பவர் தோழர்  பாந்தே.


 சி.ஐ.டியு   சங்கத்தின்   தமிழ் மாநில மாநாடு 
சென்ற ஆண்டு கடலூரில் நடைபெற்றபோது  அதிலே
அவர் பங்கேற்றார். அதற்கு முன்பாக ஏலகிரி 
வந்த அவரோடு,  கடலூர் வரை செல்லும்  நல்ல 
வாய்ப்பை எனக்கு அளித்தார்கள். 


 அந்த ஏழு மணி நேர பயணம் மிகச் சிறந்த
 அனுபவம்.  பல கேள்விகளை  கேட்டேன். 
 சிக்கலான அரசியல்  கேள்விகளும் உண்டு.
அத்தனைக்கும்  தெளிவான முறையில்  
விளக்கமளித்து  வந்தார். 


மிகப்பெரிய பொறுப்பில் உள்ள நாம் 
சாதாரண ஊழியனுக்கு  பதிலளிப்பதா என
 அவர்  தயங்கவே இல்லை. 


 அற்புதமான தோழமை உணர்வை  
நான் அன்று அனுபவித்தேன். 
மகத்தான  தலைவனுக்கு
மனமார்ந்த அஞ்சலி

1 comment: