Monday, August 29, 2011

லோக்பாலையும் தாண்டி


அண்ணா ஹசாராவின் 12 நாள் உண்ணாவிரதம் நாடாளுமன்றம் அளித்த
உறுதி மொழியை அடுத்து முடிந்திருக்கிறது. லோக்பால் மசோதா குறித்து
நாடாளுமன்ற நிலைக்குழு  அண்ணா ஹசாரே  தெரிவித்த கருத்துக்களை
விவாதிக்கும். அதிகார மட்டத்தில் கீழே உள்ளவர்களையும் லோக்பால்
வரம்பிற்குள் கொண்டு வருவது, மக்கள் சாசனத்தை பரிசீலிப்பது,
மாநிலங்களில் லோக் ஆயுக்தா கொண்டு வருவது போன்ற அம்சங்கள்
ஏற்றுக் கொள்ளப்பட்டது. முக்கியக் கோரிக்கையாக இருந்த பிரதமர்
மற்றும் உயர் நீதித்துறையை கொண்டு வருவது என்பது பற்றி
ஏன் இப்போது யாருமே பேசவில்லை என்பது மர்மமாக உள்ளது.

ஊழல்களில் நிறுவனங்களின் பற்றி அண்ணா ஹசாரே  எதுவுமே
சொல்லாதது என்பது அவர் மீதான விமர்சனம் என்ற போதிலும்
ஊழலுக்கு எதிரான ஒரு பரந்த கருத்தோட்டத்தை உருவாக்குவதில்
அவரது பங்கு மகத்தானது.

லோக்பால் சட்டம் மட்டுமே ஊழலை கட்டுக்குள் கொண்டு வரும்
என்ற பிரமை யாருக்கும் தேவையில்லை. தேர்தல் சீர்திருத்தம்,
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள  சில
உரிமைகளை கட்டுப்படுத்துதல், கருப்புப் பணத்தை கைப்பற்ற
உறுதியான சட்டங்கள், நடவடிக்கைகள், நீதித்துறை செயல்பாடுகளை
கண்காணிக்க தேசிய நீதித்துறை ஆணையம், அதிகார வர்க்கத்திற்கும்
முதலாளிகளுக்கும் இடையேயான தொடர்புகளை கண்காணித்தல்,
மக்கள் முன்வைக்கும் குறைபாடுகளை களைய உறுதியான
ஏற்பாடுகள். ஊழல்களை அம்பலப்படுத்துவோரை பாதுகாத்தல்
ஆகியவை  அவசியம் தேவைப்படுகின்ற நடவடிக்கைகள்.

அப்போதுதான் ஊழலை கட்டுப்படுத்துவது என்ற திசைவழியில்
முன்னேற முடியும்.

No comments:

Post a Comment