Wednesday, August 31, 2022

காவிகளின் கலவர வினாயகர்

 


நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு,

பெங்களூரில் வக்ப் ஆணையத்துக்கு சொந்தமான,  இருநூறு வருடங்களாக இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வரும் ஈத்கா மைதானத்தில் வினாயகர் சதுர்த்தி விழா நடத்த வேண்டும் என்ற கர்னாடக அரசின் ஆணைக்கு எதிரான வழக்கு அது. நல்ல வேளையாக உச்ச நீதிமன்றம் கர்னாடக அரசை அனுமதிக்கவில்லை. 

இஸ்லாமியர்களின் வழிபாட்டு இடத்தில்தான் வினாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டுமா? வேறு இடமே பெங்களூரில் கிடையாதா?

கலவரத்தைத் தூண்ட வேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன நோக்கம் இதில் இருக்க முடியும்!

புதிய பரிசோதனைக்கூடமாக கர்னாடக மாநிலத்தை மாற்றிக் கொண்டு வருகிறார்கள் என்பதை கவனத்துடன் பார்க்கத் தவறினால் பாதிப்பு மிகவும் பெரிதாக இருக்கும். 

No comments:

Post a Comment