Wednesday, August 31, 2022

இது நடந்தால் அதானி முதலிடம்தான்.

 மோடியின் முதலாளி அதானி உலகின் மூன்றாவது பணக்காரர் ஆகி விட்டார் என்பதுதான் நேற்றைய செய்தி. இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. நேற்று வெளியான கார்ட்டூன் ஒன்றும்  கீழே உள்ளது.

 


உங்களது வங்கியை வாங்க எனக்கு கடன் கொடுங்கள் என்று அதானி கேட்பது போல அமைந்துள்ளது அந்த கார்ட்டூன். அப்படி கடன் கொடுத்தால் அதானி முதல் இடத்தை பிடிப்பதற்கும் வாய்ப்பு உண்டு.

 

கடந்த வாரம் ஒரு ஆய்வறிக்கை வந்தது. அதானிக்கு வரம்பு மீறி இந்திய வங்கிகள் கடன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வாங்கும் கடனை திர்ப்பிச் செலுத்தும் வல்லமை அதானிக்கு கிடையாது என்பதே அந்த அறிக்கையின் சாராம்சம்.

 

ஆனால்  அந்த அறிக்கையை தயாரித்தவர்களுக்கு ஒரு உண்மை தெரியவில்லை.

 

அதானி கடன் வாங்குவது திருப்பி செலுத்துவதற்கல்ல. அவர் வாங்கும் கடனை எல்லாம் தள்ளுபடி செய்வதற்காகத்தான் அதானி மோடியை பிரதமராக நியமித்துள்ளார் என்பதும் அப்படி தள்ளுபடி செய்யப்பட்ட கடன் கொண்டுதான் அதானி உலகின் மூன்றாவது பெரும் பணக்காரராக உருவெடுத்துளார்.

 

அதானியும் வங்கிகளும் கடன் கொடுப்பது, தள்ளுபடி செய்வது என “செத்து செத்து” விளையாடிக் கொண்டிருக்கிறது.

 

அதனால் அதானி  வெகு சீக்கிரமாகவே முதலிடத்தை பிடித்தாலும் அதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.

No comments:

Post a Comment