Tuesday, August 30, 2022

பொசுக்குன்னு தீர்ப்பே சொல்லிட்டீங்களே ஜட்ஜய்யா

 



 

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீன் கேட்கிறார்கள்.

 

ஜாமீன் வழக்கை விசாரித்த நீதிபதியோ

 

“அந்தப் பெண் பாலியல் கொடுமைக்கு உள்ளாகவில்லை, கொலை செய்யப் படவில்லை, தற்கொலைதான் செய்து கொண்டுள்ளார்”

 

என்று சொல்லி ஜாமீன் கொடுத்தது மட்டுமல்லாமல்

 

“உங்களைப் போன்ற கல்விமான்கள் எல்லாம் 45 நாட்கள் சிறையில் இருக்க வேண்டியதாகி விட்டதே”

 

என்று கண்ணீர் வேறு வடித்துள்ளார்.

 

காவல்துறை இன்னும்  முழுமையான விசாரணையை முடிக்கவில்லை. குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை.

 

அதற்குள்ளாக தீர்ப்பே சொல்லி விட்டீர்களே ஜட்ஜய்யா, இது சரியா?

 

நாளை வழக்கு வரும் போது அதன் மீது எப்படிப்பட்ட தாக்கத்தை உருவாக்கும் என்பது தாங்கள் அறியாததா?

 

ம். இதுக்கு மேலே எழுதினால் நீதி மன்ற அவமதிப்பு ஆகிடுமோன்னு யோசிக்க வேண்டியிருக்கு.

 

அவசரப்பட்டுட்டீங்க. அவ்வளவுதான் சொல்ல முடியும்.

 

No comments:

Post a Comment