Friday, August 26, 2022

போட்ட ஓட்டு வேஸ்டாயிடுச்சே . . .

 


அதானிக்கு  கொடுக்காமல் தனக்கே ஒரு சுரங்கத்தை குத்தகைக்கு எடுத்துக் கொண்டார் என்று சங்கிகள் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரேன் மீது புகார் கொடுக்க தேர்தல் ஆணையம் ஒரு சீலிட்ட கவரில் தன் பரிந்துரையை அம்மாநில ஆட்டுத்தாடிக்கு அனுப்பி உள்ளது.

ஹேமந்த் சோரேனின் பதவியை பறிக்கும் பரிந்துரையைத்தான் தேர்தல் ஆணையம் அனுப்பி உள்ளதாக சங்கிகள் சொல்லி வருகிறார்கள். சீலிட்ட கவருக்குள் என்ன உள்ளது என்ற ரகசியம் அவர்களுக்கு நிச்சயம் தெரியும். தேர்தல் ஆணையமும் மோடியின் ஏவல் நாய்தானே!

ஆனால் பாவம் ஹேமந்த் சோரேன்!

மோடியை முறைத்துக் கொள்ள வேண்டாம் என்பதற்காக "பழங்குடியினப் பெண்மணி ஜனாதிபதியாக வேண்டும்" என்று சொல்லி ஓட்டு போட்ட ராஜ தந்திரம் அநியாயமாக வீணாகி விட்டது. 


No comments:

Post a Comment