Monday, August 29, 2022

நீங்க அவ்ளோ நல்லவரா ஜட்ஜய்யா?

 


புதிதாக பொறுப்பேற்று 72 நாட்கள் மட்டுமே பணியில் இருக்கப் போகும் உச்ச நீதிமன்ற  தலைமை நீதிபதி இந்த வாரத்தில் விசாரிக்க வேண்டிய முக்கிய வழக்குகளாக நான்கு வழக்குகளை எடுத்துக் கொண்டுள்ளார்.

1) மொட்டைச்சாமியார் ஆட்சியில் ஹாத்ராஸில் நடந்த கூட்டுப் பாலியல் வன்புணர்ச்சி மற்றும் கொடூரக் கொலை பற்றி விசாரிக்கச் சென்று இரண்டு வருடமாக சிறையில் இருக்கும் சித்திக் காப்பான் வழக்கு.

2) பீமா கொரேகான் வழக்கில் சிறையில் இருக்கும் கௌதம் நவ்லாகா பிணை வழக்கு.

3) குஜராத் கலவரங்களில் பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் கேட்டு போராடிய செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாட் பிணை வழக்கு.

4) கர்னாடகா ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கு.

முக்கியமான வழக்குகளை உடனே விசாரிக்கும் அளவிற்கு நல்லவரா நீங்களா என்று ஆச்சர்யப்பட வைக்கிறார். இந்த வழக்குகளை விசாரித்து நல்ல தீர்ப்பு கொடுத்தால் மகிழ்ச்சிதான், என்ன அவரது பழைய வரலாறுதான் அச்சமூட்டுகிறது.



பொறுத்திருந்து பார்ப்போம். இவர் நீதிபதி சேலமேஸ்வர் வகையறாவா இல்லை தீபக் மிஸ்ரா, ரஞ்சன் கோகாய், பொப்டே வகையறாவா என்று.  

No comments:

Post a Comment