Thursday, August 18, 2022

கோணல் கொடி அம்பானியுடையதுதான்.

 


ஒன்றிய அரசின் கட்டளைப் படி அஞ்சல் அலுவலகத்திலிருந்து வாங்கப்பட்டு ஊழியர்கள் அனைவருக்கும் எங்கள் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட தேசியக் கொடிதான் மேலே உள்ளது.

தேசியக் கொடி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கென்று வரையறைகள் உண்டு. கொடியின் நீள, அகலம் எந்த அளவில் இருக்க வேண்டும், மூன்று வர்ணங்களும் சம அளவில் இருக்க வேண்டும். வெள்ளையின் நடுவில் நீல நிறத்தில் அசோகச் சக்கரம் இருந்திட வேண்டும்.

இந்த கோணல் கொடியில் எதுவாவது ஒழுங்காக இருக்கிறதா பாருங்கள்.

கதர்க் கொடிக்குப் பதிலாக பாலியெஸ்டர் கொடியை பயன்படுத்தலாம் என்றும் வீட்டுக்கு வீடு கொடியேற்ற வேண்டும் என்பதும் ரிலையன்ஸ் கம்பெனி தேசியக் கொடியை தயாரித்து லாபம் பார்க்கத்தான் என்று ஒரு தகவல் உலா வந்தது.

இந்த கோணல் கொடியை பார்க்கும் போது “அது நிச்சயம் அம்பானியின் தயாரிப்புதான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. வேறு யார் இப்படி அலட்சியமாக கொடி தயாரிப்பார்கள் !!!!

மோடியின் முதலாளி லாபம் சம்பாதிக்க அசிங்கப்பட்டது என்னவோ தேசியக் கொடிதான் . . .

No comments:

Post a Comment