Monday, August 29, 2022

புல்புல் சாவர்க்கர் – 2 கேள்விகள்


 புல்புல் பறவையின் மீது அமர்ந்து சாவர்க்கர் தன் தாய் நாtட்டைப்  பார்க்க வந்த கதை குறித்து எல்லோரும் எழுதி விட்டார்கள். மோடி முதலையை வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்ததை விட மோசமான கதை இது. 

 எனக்கு இரண்டு கேள்விகள்தான்.

 அந்தமான் ஏதாவது வெளி நாடா?  அதுவும் இந்தியாவின் ஒரு பகுதிதானே!  அப்படியென்றால் அவர் சென்ற தாய் நாடு எது? அவர் மன்னிப்பு கேட்ட மாட்சிமை தாங்கிய எலிசபத் மகாராணியின் இங்கிலாந்தா?

 புல்புல் பறவை மீதமர்ந்து அன்றாடம் தாய் நாட்டை பார்வையிடச் சென்ற சாவர்க்கர் ஏன் தினசரி அந்தமான் சிறைக்கே திரும்பி வர வேண்டும்? முதல் முறையாக வெளியே சென்ற போதே தப்பித்து இந்திய விடுதலைக்காக போராடி இருக்கலாமே! அப்படி ஒன்றும்  சட்டத்தை மதிக்கும் நல்லவர் கிடையாதே! காந்தியைக் கொல்ல திட்டமிட்டு துப்பாக்கி கொடுத்தனுப்பிய ஆள்தானே!

 கதை விடுங்கடா! கொஞ்சம் அளவோட கதை விடுங்கடா!!!

 கர்னாடகா மாநில கல்வித்தரம் எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்பதுதான் இந்த நகைச்சுவையையும் மீறி கவலை அளிக்கிற விஷயம்.

 அதே போல சாவர்க்கர் மாதிரியான ஆசாமிகளுக்கு கட்டமைக்கிற பிம்பம் உண்மையிலேயே மிகவும் ஆபத்தானது. ஆம் இன்னொரு கதையையும் பார்த்தேன். அது நாளை.

 

  

No comments:

Post a Comment