Friday, August 26, 2016

மாரியம்மன், பிள்ளையாருக்கு போட்டியாகவா?

எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் காந்தி நகர் என்ற பகுதி உள்ளது. அங்கே ஒரு மகா மாரியம்மன் கோயில் உள்ளது. கடந்த வருடமும் சரி, இந்த வருடமும் சரி, கூழ் ஊற்றும் திருவிழாவை முன்னிட்டு பெரிய அளவில் மாரியம்மனின் சிலையை வைத்திருந்தார்கள்.

ஊரெங்கும் வைக்கும் பிள்ளையார் சிலைக்கு போட்டியாகவே அந்த மாரியம்மன் சிலையை வைத்ததாக அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். 

அது சரிதான் என்பது போல, வழக்கமாக இது போன்ற திருவிழாக்களின் போது அங்கே ஊடுறுவும் காவிக் கொடிகளை மாரியம்மன் கோயில் பக்கம் பார்க்க முடியவில்லை.

மகா மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது தலித் மக்கள் குடியிருப்பு என்பது கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.

நீங்கள் எப்படி கோயில் கட்டி, திருவிழா நடத்தி, சிலை வைக்கலாம் என்று சேஷ சமுத்திரம் போல பிரச்சினை செய்யாதவரை நலமே.

அந்த சிலையின் இரண்டு புகைப்படங்களைப் பாருங்கள். கடைசியில் ஒரு கேள்வியும் இருக்கிறது. 



அம்மன் சிலையினை மீண்டும் ஒரு முறை நன்றாகப் பாருங்கள். 
ஒரு வித்தியாசம் உள்ளது. என்னவென்று கண்டு பிடியுங்கள்.

4 comments: