Sunday, January 1, 2012

டைம் கேட்டால் சொல்லுங்கள் . இல்லையென்றால் சுடப்படுவீர்கள்



நேரம் என்ன என்ற கேள்விக்கு உடனே பதில் சொல்லாத
குற்றத்திற்காக ஒரு இந்திய மாணவன் லண்டன்  நகரில்
சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.

டீ வாங்கித் தராததால் , குவார்ட்டரில் கட்டிங் தராததால்
கத்தியால் குத்து என்ற தினத்தந்தி செய்தி போல 
நடந்திருக்கிறது.

இந்த கொடுமையை செய்தவனை உலகின் தலை சிறந்த
ஸ்காட்லாந்து யார்ட் போலீசால் இன்னும் பிடிக்க முடியவில்லை.

இவ்வளவு  லட்சணமாக  தனது நாட்டின் சட்டம் ஒழுங்கை
வைத்துக் கொண்டு இங்கிலாந்து பிற நாடுகளில்
மூக்கை நுழைக்கிறது.

அந்த பகுதியே சரியில்லை என இப்போது சொல்கின்ற 
அரசு அப்பகுதியில் உள்ள குண்டர்களை கட்டுப் படுத்தி
இருக்கலாம்.

இங்கிலாந்து செல்பவர்கள் ஜாக்கிரதை!
டைம் கேட்டால் சொல்லுங்கள் .
இல்லையென்றால் சுடப்படுவீர்கள்    

3 comments:

  1. மொத்தமாக சுரண்டப் பட்டு நிர்க்கதியாய் விடப் பட்டு மன அழுத்தம் காரணமாக இப்படிப்பட்ட குற்றங்கள் நடப்பதற்கு காரணமான தனி உடமை வாதிகள் திருந்தினால் நலம்

    ReplyDelete
  2. கொடுமையான செய்தி தான்

    ReplyDelete
  3. வேதனையான பதிவு.

    ReplyDelete