Tuesday, January 31, 2012

உடுப்பி கிருஷ்ணா, உன் சந்நிதியில் இப்படி ஒரு அராஜகமா?

இரண்டு  தினங்கள் முன்பாக கர்நாடக மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கட்சி
ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தியது. மூவாயிரம் பேர் அதிலே பங்கேற்று 
கைதானார்கள்.

போராட்டத்திற்கான காரணம் என்ன?
புகழ் பெற்ற  உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் நடக்கின்ற இரு மோசமான
நடைமுறைகளை தடுத்து நிறுத்த வேண்டும்  என்பதுதான்  அந்த
போராட்டத்தின் நோக்கம்.

அப்படி என்ன மோசமான நடைமுறைகள்?

ஒன்று கோயிலில் நடைபெறும் அன்ன தானத்தில் உயர் ஜாதியினருக்கும்
மற்ற ஜாதியினருக்கும் தனித்தனியாக பந்திகள் போடப்படுகின்றன.

இரண்டாவது உயர் ஜாதியினர் சாப்பிட்ட எச்சில் இலைகளில் மற்ற
ஒடுக்கப் பட்ட மக்கள்  அங்கப் பிரதட்சிணமாக  உருள வேண்டுமாம்.

இதைக் கேட்கவே அருவெறுப்பாக  உள்ளது. ஆனால் இதனை 
பாஜக அமைச்சர் ஆசார்யா  நியாயப்படுத்தியுள்ளார். அப்படி செய்தால்
சரும வியாதிகள் குணமாகும் என்று நம்பிக்கை உள்ளதாம். இது
ஒரு அமைச்சர் பேசும் பேச்சு!

அப்படி என்றால் உயர்சாதிக்காரர்களும்  எச்சில் இலைகளில் 
புரள்வார்களா?  அவர்களின் எச்சில் இலைகள் என்ன மூலிகை
இலைகளா?

உடுப்பி மடாதிபதி  பந்தி தனித்தனியாக நடத்துவது தவறுதான்,
ஆனால் உயர் ஜாதிக்காரர்கள் பிடிவாதம் பிடிக்கிறார்களே 
என்று புலம்புகின்றார்.

அரசு எதுவும் செய்யாது. மடாதிபதி புலம்புகின்றார். அப்போது
என்ன வழி?

ஒன்று உடுப்பி கிருஷ்ணன் இது தவறு என தனது பக்தர்களுக்கு
போதிக்க வேண்டும். இது நடக்காது.

ஒடுக்கப் பட்ட மக்கள் உடுப்பி கிருஷ்ணன் கோயிலை 
புறக்கணிக்க வேண்டும். அதுதான் தீர்வு!
 
  
 

No comments:

Post a Comment