Saturday, June 11, 2011

தமிழகத்தில் தரிசு நிலம்? ஜெயலலிதாவிற்கு பதில்

தமிழகத்தில்  தரிசு நிலமே கிடையாது  என்று  ஜெயலலிதா சொன்னாதற்கு   மார்க்சிஸ்டுகள் ஏன்  மௌனமாக   உள்ளனர்  என்று 
ஒரு மூன்று நாட்களாக  சில தோழர்கள் பிய்த்து பிடுங்கிக் கொண்டு 
இருந்தார்கள்.  கூட்டணி வைத்ததால்  தயக்கமா  என்ற கேள்வியும் 
இணைந்தே  வந்தது. 


பதவிகளுக்காக  கொள்கைகளில்  சமரசம் செய்து கொள்பவர்கள் அல்ல
மார்க்சிஸ்டுகள்  என்பதை  இன்று  தீக்கதிரில்  வந்துள்ள தோழர் பெ.சண்முகம்  அவர்களின்  கட்டுரை  தெளிவாக்கும்.  நிலத்திற்கான 
போராட்டத்தை  முன்னேடுத்துச்   செல்வதற்கான  அடையாளமாகவும்
இக்கட்டுரையை  பார்க்க முடியும்.  
 



வசதிபடைத்தவர்களால் வளைக்கப்பட்டுள்ளது
-பெ. சண்முகம் 
“தமிழகத்தில் தரிசு நிலமே இல்லை. எல்லா தரிசு நிலமும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்திலும் எனது ஆட்சிக் காலத்திலும் பிரித்து வழங்கப்பட்டு விட்டன. முந்தைய அரசு 2006ல் இந்தத் திட்டத்தை அறிவித்த போதே தரிசு நிலங்கள் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளேன்” என்று ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது குறுக்கிட்டு பேசிய முதல்வர் ஜெய லலிதா கூறியுள்ளார். தமிழகத்தில் தரிசு நிலமே இல்லை என்று கூறுவது சரியல்ல என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

2004-05ம் ஆண்டு முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த போதே அரசு வெளி யிட்டுள்ள விபரப்படி தரிசு நிலத்தின் பரப் பளவு 23.96 லட்சம் ஹெக்டேர் (ஏறத்தாழ அறுபது லட்சம் ஏக்கர்). இதுவல்லாமல் சாகு படிக்கு ஏற்ற தரிசு நிலம் ஏறத்தாழ 10 லட்சம் ஏக்கர். இந்த நிலத்தில் சிறுபகுதியை சிறு, குறு விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் ‘ஒருங்கிணைந்த தரிசு நில மேம்பாட்டுத் திட்டம்’ என்ற பெயரில் தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இது குறித்து 2002-03ம் ஆண்டு நிதிநிலை அறிக் கையில் “தரிசு நிலங்களை விளைநிலங் களாக மாற்றுவதில் தனியார்துறை பங்கேற் பை ஊக்குவிக்கும் பொருட்டு, பெரும்பாலான தரிசு நிலங்களையும், தரம் குறைந்த நிலங் களையும் நீண்டகால அடிப்படையில் குத் தகைக்கு விட அரசு தயாராக உள்ளது” என கூறப்பட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு பணிகள் துவக்கப்பட்டன. கடும் எதிர்ப்பின் காரணமாக பிறகு அரசு பின்வாங்கியது.

தமிழகத்தில் எந்தவொரு ஆட்சிக் காலத் திலும் உச்சவரம்புச் சட்டத்தை பயன்படுத்தி மிச்ச நிலம் பெருமளவு விநியோகம் செய்யப் படவில்லை. 1961ம் ஆண்டு துவங்கி 31.3.2009 வரையிலான 50 ஆண்டு காலத்தில் உபரியாக அறிவிக்கப்பட்ட நிலம் 2,08,383 ஏக்கர். இதில் பயனாளிகளுக்கு ஒப்படை செய்யப்பட்ட நிலம் 1,90,073 ஏக்கர். 1,50,491 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 2001-2006ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட உபரி நிலம் 8,371 ஏக்கர் மட்டுமே. இது 6,439 பேருக்கு வழங்கப்பட் டுள்ளது.

எனவே தமிழ்நாட்டை பொறுத்தவரை உச்சவரம்புச் சட்டத்தின் கீழும் நிலம் முழு மையாக கைப்பற்றப்பட்டு வழங்கப்பட வில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக, நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு தலா 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று வாக் குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு 50 லட்சம் ஏக்கர் அளவுக்கு தரிசு நிலம் இல்லை என்று சாதித்தனர். திமுக ஆட்சி யில் தரிசு நிலவிநியோகம் என்பது பெயரள வுக்கு ஏமாற்று நாடகமாகவே நடந்து முடிந்து விட்டது. பெரும்பகுதியான மக்கள் வேளாண் மையை சார்ந்துள்ள ஒரு மாநிலத்தில், கிராமப் புறங்களில் பெரும்பகுதியானவர்கள் நிலமற்ற வர்களாக உள்ள நிலையில், தரிசு நிலமே இல்லை என்று இப்போதும் கூறுவது, நில மற்ற ஏழை, எளிய மக்களின் நலனை பாது காக்க உதவாது என்பதை ஆழ்ந்த வருத்தத் துடன் குறிப்பிட வேண்டியுள்ளது.

நிலம் காணாமல் போய்விடக் கூடிய பொருளல்ல. தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப் பான 130.3 லட்சம் ஹெக்டேருக்கான விபரங் களும் ஆவணங்களாக அரசு அலுவலகங் களில் தூசி படிந்து கிடக்கிறது. எனவே, தரிசு நிலங்கள் எங்கே மறைந்து கிடக்கிறது என் பதை கண்டறிவது அரசு நினைத்தால் ஒரு சில வாரத்தில் நடைமுறை சாத்தியமாகக் கூடியக் காரியமே! தரிசு நிலங்களை கண் டறிந்து நிலமற்ற ஏழைகளை நிலஉடமை யாளராக ஆக்க வேண்டுமென்ற உறுதி தான் இப்போது தேவை.

தரிசு நிலங்கள் வசதிபடைத்த மனிதர் களால், அரசியல் செல்வாக்குள்ளவர்களால் வளைத்துப் போடப்பட்டிருக்கிறது. இத்த கையவர்கள் சட்டத்தை வளைத்து மோசடி யாக பட்டா பெற்று அனுபவித்து வருகிறார்கள். உதாரணத்திற்கு காவேரிராஜபுரத்தில் அர சுக்கு சொந்தமான தரிசு நிலம் 193.93 ஏக்கர், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி. தினகரனால் ஆக்கிரமிக்கப்பட்டு வேலி போடப்பட்டிருக்கிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவரே அரசுக்கு அறிக்கை அளித்துள்ளார். இது போல, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், விழுப்புரம், விருதுநகர் என ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு நிலம் செல்வாக்கு படைத்த நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

எனவே, அரசு தரிசு நிலங்களை மீட்க தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதற்கென்று ஒரு சிறப்புக் குழுவை நியமித்து ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் தரிசு நிலங்களை கண்டறிய அரசு முன்வரவேண் டும். கிராம வாரியாக தரிசு நிலம் குறித்த சர்வே எண், அது யாருடைய ஆக்கிரமிப்பில் இருக்கிறதென்ற விபரத்தை அறிய மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மூலம் அரசு முயற்சிக்க வேண்டும். நிலம் என்பது விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் வாழ்வா தாரம். அவர்கள் நிம்மதியாக வாழ அதுவே ஆதாரம். முந்தைய அரசு அறிவித்த திட்டங் களை அரைகுறையாகவும், மோசடியாகவும் நிறைவேற்றியதால்தான் தி.மு.கவுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். எனவே அதிமுகவுக்கு மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் வாக்களித்து ஆட்சியில் அமர வைத்துள்ள னர். ஏழைகளின் எதிர்பார்ப்புகளை நிறை வேற்றும் வகையில் புதிய அரசின் செயல் பாடு அமைய வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

கட்டுரையாளர்,

தமிழ்நாடு விவசாயிகள்

சங்கத்தின் பொதுச்செயலாளர்

No comments:

Post a Comment