Sunday, June 26, 2011

மகேந்திர சிங் தோனி கொடுத்த செல்லாத செக்

வீட்டு வரி கட்டுவதற்காக  ராஞ்சி மாநகராட்சிக்கு  இந்திய கிரிக்கெட் 
அணியின்  காப்டன்  மகேந்திர சிங் தோனி கொடுத்த 645  ரூபாய்க்கான
காசோலை  செல்லாது  என  திரும்பி வந்து  விட்டதாம். 


வங்கியின்  கணக்கு  எண்  காசோலையில்  தவறாக எழுதி விட்டார்கள் 
என்று  ராஞ்சி மாநகராட்சி  அதிகாரிகள் சமாளிக்கிறார்கள். இப்போதெல்லாம்  வங்கிக் கணக்கு எண் அச்சிடாமல்  எந்த வங்கியும்
காசோலை புத்தகமே  வழ்ழங்குவதில்லையே! தோனிக்கு மட்டும்  
வங்கி கணக்கு எண் போடாத  காசோலை புத்தகம் அளித்து விட்டார்களோ? இல்லை  அவரது கணக்கில் அவ்வளவுதான் 
பணம் இருந்ததோ? பாவம் பரம ஏழை! 


ஒரே ஒரு சந்தேகம். வேலூர் கூட இல்லை, பக்கத்தில் உள்ள சத்துவாச்சாரி  நகராட்சிதான்.  அங்கே வெறும் 900  சதுர அடி 
வீட்டிற்கு  வருடம் 3000 ரூபாய் வீட்டு வரி கட்டுகிறேன்.  ஜார்கண்ட் 
தலைநகர் ராஞ்சியில்  தோனி வீட்டிற்கு வரி வெறும் 645  ரூபாய்தானா? 
இல்லை அது வெறும் குடிசையா? 


பணம் உள்ளவர்களுக்கு மேலும் பணம் சேர்த்துத் தருவதுதான் 
இன்றைய அரசுகளின் கடமை போலும்!
  

No comments:

Post a Comment