Sunday, June 12, 2011

மத வெறியர்கள் படிக்கக் கூடாத ஒரு இரங்கற்பா!

 மறைந்த ஓவியக் கலைஞர்  எம்.ஃஎப்.ஹுசைனுக்கு  இந்து ராமின் அஞ்சலி. மத வெறியர்களுக்கு சவுக்கடியும் கூட.    நன்றி - தீக்கதிர் நாளிதழ்
       
கடந்த செவ்வாய்க்கிழமை மதிய நேரத்தில் லண்டனில் உள்ள மருத்துவமனைப் படுக்கையில் படுத்தவா றே, இந்தியாவின் தலைசிறந்த மிகவும் கொண் டாடப்பட்ட கலைஞரான எம். எப்.உசேன் தொலைபேசியில் அழைத்தார். துபாயில் இருந்தபோது “உணரமுடியாத மாரடைப்பு தாக்கியது” என்று மிகவும் மெலிதான குரலில் அவர் குறிப்பிட்டார். அது நடந்தபோது அதைக் கண்டுபிடிக்கவில்லை. நல்ல மருத்துவர்களையும், மருத்துவ வசதிகளையும் கொண்ட லண்டன் ராயல் பிராம்ப்டன் மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக சென்றபோது இது தெரிய வந்தது என்றார். எப்படி இருக்கிறீர் கள் என்று கேட்டபோது, வேறு எந்த சிக்கல்களும் இல்லை என்றார். கவனித்துக் கொள்ள வேறு யாராவது இருக்கிறார்களா என்றபோது, குடும்ப உறுப்பினர்கள் வந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

அது இறுதி விடை கேட்டு பேசிய குரல் என்று எனது உள்ளுணர்வு கூறியது. ஆயிரக்கணக்கான பிறைகளைப் பார்த்தவர், இஸ்லாமிய நாட்காட்டிப்படி நூறாண்டுகளைக் கடந்தவர், கிரிகோரியன் நாட்காட்டிப்படியும் நூறு ஆண்டுகளைக் கடப்பதற்கு தகுதி உள்ளவர் என்று எனக்குத் தெரியும். ஒரு பலவீனமான மற்றும் எந்தவித உதவியும் இல்லாத நிலையில், சொந்த 
மண்ணிலிருந்து வெகு தூரத்தில் மருத்துவமனைப் படுக்கையில் படுத்திருக்கி
றோம் என்ற உணர்வோடு அவர் என்னை தொலைபேசியில் அழைத் திருக்கிறார் என்று தோன்றியது. அவரது நிறைவுக்காலத்தில் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் கொண்ட குடும்பம் எப்படியோ சரியான 
நேரத்தில் வந்து சேர்ந்தது.

மதரீதியான வெறுப்புப் பிரச்சாரம், மிரட்டல்கள், காலித்தனங்கள் மற்றும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலைகளால் நாட்டைவிட்டே அவர் வெளியேற நிர்ப்பந்தம் ஏற்பட்ட 1996 ஆம் ஆண்டுக்கு எனது எண்ணங்கள் சென்றன. தான் மிகவும் நேசித்த இந்தியா தன்னைக் கைவிட்டு விட்டது என்று ஆழ்ந்தவருத்தத்துடன் அவர் இருந்தார். லண்டனிலிருந்தும், நியூயார்க்கிலிருந்தும் அவர் தொலைபேசியில் தொடர்ந்து பேசினார். “அந்நிய மண்ணில் இறந்துவிடாமல்”, இந்தியாவுக்குத் திரும்பி வந்துவிட வேண்டும் என்று அவர் கேட்டவண்ணம் இருந்தார். மகாராஷ்டிர மாநில அரசோடு பல மாதங்கள் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், ஒரு நடுஇரவில் மாறு வேடத் தில் நாட்டிற்குத் திரும்ப அவர் அனு மதிக்கப்பட்டார். ஆனால் அவர் ஆல் பைன் தொப்பி மற்றும் இத்தாலிய காலணியை அணிந்திருந்தாலும் மும் பை விமான நிலையத்திலும் சரி, ஹீத் ரோ விமான நிலையத்திலும் தனது மாறுவேடம் பலனளிக்கவில்லை என் பதை அவர் உணர்ந்து கொண்டார். மும்பை தாஜ் ஓட்டலுக்கு அவரை உடனடியாக நாங்கள் அழைத்துச் சென்றோம்.

இந்தப் பாதுகாப்பற்ற காலகட்டத்தில் இந்தூர் மற்றும் பல இடங்களில் நடந்த நீதிமன்ற விசாரணைகளுக்கு அவரோடு நாங்களும் சென்றோம். மதவெறிக் கும்பல்களிடமிருந்து அவருக்கு நேர்ந்த கொடுமை மற்றும் பயங்கரத்தையும் நேரில் பார்த்தோம். வளர்ந்து வரும் இந்தியாவில், தனது எண்பதுகளில் இருந்த ஒரு மேதை சந்திக்க நேர்ந்த நிலையற்ற தன்மை மற்றும் அச்சம் படர்ந்த சூழல் ஆகியவற்றையும் பார்க்க நேர்ந்தது. ஆனால், ஒரு நகரம் தனக்குப் பாதுகாப்பாக இருப்பதாக அவர் நினைத்தால் அது சென்னைதான். தனது மகன் முஸ்தபாவோடும், எங்களோடும் அவர் தங்கியிருந்திருக்கிறார். குறைவான பொருட்களோடுதான் அவர் எப்போதுமே பயணம் செய்தார். அதனால் சில ஜோடி துணிகளையும், ஓவியம் வரைவதற்குத் தேவையான பொருட்களையும் எங்கள் வீடுகளில் வைத்திருந்தார்.

அவர் அமைதியாக நேரத்தைக் கழித்தார். ஓவியம் வரைந்தார். தனது திரைப்படத்திற்கான இசைக்காக பல இரவுகளை ஏ.ஆர்.ரகுமானுடன் கழித்தார். தனது கடைசிப்படத்தின் படச்சுருள்களோடு எப்போதும் வருவார். எங்கள் நண்பர்களுக்கு அதைத் திரையிட்டுக் காட்டினார். சில சமயங்களில் எழுத்தாளர் ஆர்.கே.நாராயணனை அவர் சந்தித்தார். அதிகாலை நேரங்களில் நீலம் மற்றும் பொன்னிறக் கிளியைப் பார்ப்பதும், அதை வரைவதுமாக தனது நேரத்தைக் கழித்தார்.

எனினும் அச்சுறுத்தல் மற்றும் சட்டரீதியான மிரட்டல்களோடு தான்  இந்தப் பத்தாண்டுகள் கழிந்தன. இறுதியாக 2006 ஆம் ஆண்டில் இந்தியாவை விட்டு வெளியேறி தனது வாழ்விடத்தை வேறு இடத்தில் அமைத்துக் கொண்டார். 2006 ஆம் ஆண்டு முதல், அவருக்கு எதிராக இந்துத்துவாவாதிகளின் வெறுப்புப் பிரச்சாரம் அதிகரித்ததால் துபாயிலும், கத்தாரிலும் அவர் வசித்து வந்தார். கோடைக்காலங்களில் லண்டனில் தனது நேரத்தைக் கழித்தார். தொந்தரவு மற்றும் மிரட்டல்கள் இருந்த இந்தியாவைத்தவிர அனைத்து இடங்களுக்கும் சுதந்திரமாக அவர் பயணம் செய்து வந்தார். இங்குள்ள நிர்வாகம் அவர் திரும்புவதை உறுதி செய்யும் அளவுக்கு உறுதியானதாகவும் இல்லை. சரியான வகையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டாலும், அது மிகவும் தாமதமானதாகவே இருந்தது. உசேனின் படைப்பாற்றல் சுதந்திரத்தையும், அமைதியான மன நிலையையும் பாதுகாப்பதில் முந்தைய பாஜக அரசை விட எந்தவிதத்திலும் உயர்ந்ததாக காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி இருக்கவில்லை.

எனக்கு நினைவிருக்கிறது. பிப்ரவரி 2010ல் நியூயார்க்கிலிருந்து தொலைபேசி மூலம் அழைத்து கத்தார் குடியுரிமையை ஒப்புக்கொண்டு விட்டதாகத் தெரிவித்தார். கத்தார் குடியுரிமையால் அங்கீகரிக்கப்பட்டாலும், வெளிநாட்டில் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது மற்றும் சொந்த நாட்டின் குடியுரிமையை விட வேண்டிய நிலை ஏற்பட்டது பற்றி ஆழ்ந்த வருத்தத்தில் அவர் இருந்தார். எழுபது ஆண்டுகளாக நேசத்துடனும் மதச்சார்பற்ற வகையிலும் தனது கலையைக் கொண்டாடி வந்த பிறந்த மண்ணிலிருந்து விலகி நிற்பது அவருக்கு வருத்தத்தைத் தந்தது. கத்தார் குடியுரிமைக்காக தான் விண்ணப்பிக்கவில்லை என்றும் அந்த அமீரகத்தின் அரசு குடும்பத்தின் வற்புறுத்தலால்தான் அது கிடைத்தது என்பதையும் அவர் குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார்.

அவர் மறைந்த வியாழக்கிழமை அதிகாலை நேரம் வரையில் அன்றா டம் நாள் முழுவதும் வேலை செய்துள்ளார். ஆளுயர கண்ணாடி சிற்பங்களையும் பெரிய, பெரிய ஓவியங்களையும் உருவாக்கி வந்தார். அவரது கலைப்பணி இரண்டு முக்கிய மான அம்சங்களை உள்ளடக்கிய தாக இருந்தது. ஒன்று, இந்திய நாகரிக வரலாறு. மற்றொன்று அரபு நாகரி கமாகும். இரண்டாவது அம்சம், கத் தாரின் அரசர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் மனைவி ஷேக் மோஸா பிந்த் நாசர் அல் மிஸ் நெத்தின் முயற்சியால் உருவானது. இந்தத்திட்டத்தில் உருவாகும் படைப் புகள் அனைத்தும் தோஹாவில்தனி யாக ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்படுவதாக இருந்தது.

வருத்தத்தோடு இருந்தாலும், இந்தியாவில் உள்ள எந்தவொரு நபர் மீதும் உசேன் கோபம் அடையவில்லை. லண்டன் மருத்துவமனையில் அமைதியாகவும் கவுரவத்துடனும் நிகழ்ந்துள்ள அவரது மறைவு, சுதந்திர இந்தியாவின் மதச்சார்பின்மை வரலாற்றில் மிகவும் வருந்தத்தக்க 
அத்தியாயத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. எம்.எப்.உசேனை விட  இந்தியாவின் பன்முகத்தன்மை, பன்முக மதஉணர்வுகள் மற்றும்            மதச்சார்பின்மை ஆகியவற்றிற்கு உண்மையாகவும், உணர்வுபூர்வமாகவும் மதிப்பளிப்பவர் யாரையும் எனக்குத் தெரியாது. நவீனத்துவம், வளர்ச்சி மற்றும் சகிப்புத்தன்மை ஆகிய குறிக்கோள்கள் அவரது மூச்சோடு மூச்சாகக் கலந்திருந்தது. நாட்டின் நிர்வாகம் மற்றும் சட்டத்துறை பாதுகாப்பாக திரும்பி வருவதை உறுதிப்படுத்த முடியாதது உள்ளிட்டு அவர் நாட் டை விட்டு வெளியேற நேர்ந்த ஒட்டு மொத்த நிகழ்வுகள், சுதந்திரமான எண்ணங்கள் மற்றும் படைப்பாற் றல், மதச்சார்பற்ற நாடு ஆகியவை யெல்லாம் என்ன? என்ற கேள்விக ளைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

தனது அளப்பரிய அறிவு மற்றும் படைப்பாற்றலைப் பயன்படுத்தி நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் அற்புதங்களையும், அது பிரதிநிதித்துவப்படுத்தும் வரலாற்று நாகரிகத்தையும் படம் போட்டுக் கொண்டாடிய அதே நேரத்தில், சாதாரண நிலையிலிருந்து வந்த, நாட்டின் மகத்தான மகனுக்கு நாட்டு மக்கள் தங்கள் மரியாதையைச் செலுத்தட்டும்.



1 comment:

  1. இதே உசேன் முகமது நபியை கிண்டல் செய்து ஏன் வரையவில்லை?

    ReplyDelete