Sunday, June 5, 2011

மரண மருத்துவர் (டாக்டர் டெத்) மரணம்






டாக்டர் டெத் என்று  அழைக்கப்பட்டிருந்த  ஜாக் கேவோர்கியான் இறந்து விட்டார். உயிர் காக்கும்  தொழிலான  மருத்துவத் தொழில்  செய்து வந்த 
ஜாக் கேவோர்கியான்  பல உயிர்களை  காத்த மருத்துவர்  என்று புகழ் 
பெறவில்லை.  தனது நூற்று முப்பது  நோயாளிகளை  கருணைக் கொலை
செய்தவர்  என்பதால்  செய்திகளில்  இடம் பிடித்தவர்.

நீதி மன்றம்  அளிக்கும் தூக்கு தண்டனைகளே கூடாது  என்ற குரல்  உலகெங்கும்  ஒலிக்கும்  நேரத்தில்  உயிர் காக்கும்  மருத்துவர்  உயிரெடுக்கும்  பேர்வழியாய்  மாறிப்போனார். 





1990   முதல்  1998  வரை  130   நோயாளிகள்  இவரால்  கருணைக்கொலை 
செய்யப்பட்டு  இறந்துள்ளனர்.  தான்  செய்த  செயலை  தனது  இறுதிக்காலம்  வரை   ஜாக் கேவோர்கியான்   நியாயப்படுத்தியுள்ளார். 
நோயின் பிடியில்  அவஸ்தைப் படும் நோயாளிகளுக்கு  விடுதலை 
கொடுத்தே. இதிலே  என்ன  தவறு  உள்ளது  என்று  தனது இறுதி மூச்சு 
வரை  வாதிட்டுள்ளார். அதை சட்டபூர்வமாக்க வேண்டும்  என்றும் 
வலியுறுத்தியுள்ளார். 






ஒரு நோயாளி  இறந்து போய் விடுவான், குணமாக விட்டான்  என்று முடிவு  செய்ய  இவருக்கு  எந்த அதிகாரமும்  கிடையாது. ஆனாலும் 
அப்படி  இருப்பதாக  இவரே  நினைத்துக் கொண்டு  செயல்பட்டுள்ளார். 
அதற்காக  ஒரு முறை கைது செய்யப்பட்டு  தண்டனையும்  பெற்றுள்ளார். 
தண்டனைக் காலம் முடிவதற்கு  முன்பே  விடுதலை பெற்று  மீண்டும் 
அதே கொலைத் தொழிலை மீண்டும்  செய்துள்ளார். 



கருணைக் கொலை, அவஸ்தையிலிருந்து  விடுதலை என்றெல்லாம் 
சொல்லிக் கொண்டாலும்  வக்கிரம்  பிடித்த  மனிதர்  என்பது நன்றாக 
தெரிகிறது. ஏனென்றால்  தற்கொலை  செய்ய வைப்பதற்காகவே  இவர் 
ஒரு இயந்திரத்தை  உருவாக்கி  அது பற்றி  பெருமையாக பீற்றிக் கொண்டிருக்கிறார்.  அதே போல் ஒரு நோயாளி  இறப்பதை  வீடியோ 
எடுத்து  அதனை  எல்லோருக்கும் போட்டுக் காட்டியுள்ளார். 



மருத்துவர் என்ற பெயரில் நடமாடிய இந்த மன நோயாளியை போற்றும் விதத்தில்  ஹாலிவுட்டில்  ஒரு திரைப்படம்  எடுக்கப்பட்டு  அது வெற்றிகரமாக வேறு  ஓடியுள்ளது. 



இறுதியில்  இந்த  மருத்துவர்  இரண்டு நாட்களுக்கு முன்னால்   இறந்து போய் விட்டார். இயற்கையாக , தற்கொலை செய்து கொள்ளாமலேயே. 



அவரும்  ஒரு மாதம் உடம்பு  முடியாமல்  அவஸ்தைதான் பட்டுள்ளார். மற்றவர்களுக்கு  அவர் அளித்த  கருணைக்கொலை என்ற பரிசை  அவர் தனக்கு மட்டும் பயன்படுத்தவில்லை.   



ஆயிரம் பேரை  கொல்பவன்  அரை வைத்தியன்  என்பது  தமிழ் பழமொழி. அதை உண்மையாக்க முயன்றவர்   ஜாக் கேவோர்கியான்

No comments:

Post a Comment