Thursday, June 9, 2011

எனக்கு சம்பளம் வேண்டாம் - ஜப்பானில் ஜெயலலிதா







ஃபுகூஷியாமா  அணு ஆலை  விபத்தின் பிரச்சினைகள் தீரும் வரை பிரதமர் பதவிக்கான சம்பளம் வாங்கப்போவதில்லை  என்று  ஜப்பான் பிரதமர் நவோடா கான் சொல்லியுள்ளார்.  என்ன ஒரு பொறுப்பான பிரதமர் என்று ஜப்பான் ஊடகங்கள் மட்டுமல்ல இந்திய மக்கள்  கூட  சிலர் பாராட்டியுள்ளனர்.  


இச்செய்தி  தனது  முதல் ஆட்சிக்காலத்தில்  ஒரு ரூபாய்  மட்டுமே சம்பளமாக  ஜெயலலிதா வாங்கியதையும்  அந்த ஆட்சிக்காலம் ஊழல் 
மிகுந்ததாய்  நினைவு படுத்தியது.


இந்த பிரச்சினையிலும் கூட இப்போது பொறுப்பானவர்  என்று சொல்லப் படும்  ஜப்பானின் பிரதமர் சுனாமி வந்த போது , அணு உலை விபத்து
என்று வந்த போது  எவ்வளவு  பொறுப்பாக  நடந்து கொண்டார்  என்பதுதான்  இப்போது  கேள்வியே. 


கடல் நீரை  உடனடியாக பயன்படுத்தியிருந்தால் அணு உலையின் வெப்பம்  அதிகரித்து  உலைகள்  வெடித்திருக்காது. ஆனால்  அப்படி 
செய்ய  அணு ஆலையின் தனியார் நிர்வாகம்  முன் வரவில்லை. 
டோக்யோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி  என்ற அந்த  தனியார் நிறுவனம்
தனது ஆலைக்கு  பாதிப்பு வரக்கூடாது  என்றுதான் பார்த்ததே  தவிர
கதிர் வீச்சு நிகழ்ந்தால்  அது  நிகழ்ந்தால் யாருக்கோதான்  பாதிப்பு 
என்று  இருந்தது. 

 
டெப்கோ  என்று அழைக்கப்படும் நிறுவனத்தை  எதுவும்  செய்ய முடியாமல்,  உத்தரவு போட முடியாமல்  கையாலாகாத நிலையில்  
இருந்த ஜப்பான் பிரதமர்  இன்று  பொறுப்போடு  இருப்பதாக 
சொன்னால்  சிரிப்புதான் வருகின்றது. 

மொத்தத்தில்  எல்லா நாடுகளிலும்  தில்லாலங்கடிகள்  இருக்கிறார்கள்!
  
  
  

 
 

No comments:

Post a Comment