Saturday, June 4, 2011

வெறி பிடித்த ஃ பிராடு சாமியார் சாகட்டும்!




டெல்லியில்   இன்று  புதிதாக  இன்னொரு  உண்ணாவிரத  நாடகம்  
தொடங்கி விட்டது.  கார்ப்பரேட்டுகளின்  துணையோடு  நடைபெற்ற 
அண்ணா ஹாசாரே   உண்ணா விரதத்திற்கு   பின்பு   அடுத்த  உண்ணா 
விரதத்தை  போலிச்சாமியார்   பாபா ராம்தேவ்  துவக்கி விட்டார்.  

ஊழலுக்கும்  கறுப்புப் பணத்திற்கும்  எதிராக   இவர் போராடுகின்றாராம்! 
இந்த  மோசடி ஆசாமி  பற்றி  முன்னரே கூட  எழுதியுள்ளேன்.  அந்த பதிவில்   எழுதியது   மீண்டும்  உங்களின்  கவனத்திற்காக கீழே .
                                    
                    இது  நான்  முன்பு  எழுதியது  
லோக் பால் மசோதா கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர் 
அண்ணா ஹசாரே மேற்கொண்டிருந்த உண்ணா விரதம் ஊழலுக்கு 
எதிரான ஒரு அலையை இந்திய மக்களிடத்தில் உருவாக்கியது. 
அரசும் இறுதியில்  அடிபணிந்தது.  ஊழலுக்கு எதிராக போராட 
வேண்டும்  என்ற உணர்வை உருவாக்குவதில் அண்ணா ஹசாரே நடத்தியபோராட்டத்திற்கு  முக்கிய பங்கு உண்டு. அவரது நோக்கங்களும் செயல்களும் உன்னதமானது.  

ஆனால் அவரை சுற்றியுள்ள அனைவரும் அவரைப் போலவே நேர்மையானவர்களா? 

கிரண் பேடி  உண்மையிலேயே  நெருப்பு போன்ற ஒரு நேர்மையான
அதிகாரி. பணியில் தனது நேர்மையை இறுதி வரை கடைபிடித்தவர். 

மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவானவராக தோற்றமளிக்கும் சுவாமி 
அக்னிவேஷைக் கூட குறை சொல்ல முடியாது.  
ஆனால் சுவாமி ராம்தேவ்? 

தமிழகத்தின் பிரபல சாமியார்கள் போல வட இந்தியாவின் பாபுலர் 
சாமியார். பதஞ்சலி யோக மையம் என்ற அமைப்பின் மூலம் 
யோகா கற்றுத்தரும் சாமியார், வெளி நாடுகளில் இன்னும் பிரபலம். 
அந்த பிரபலம் காரணமாக தன்னுடைய யோகா மூலமாக 
கான்சரை குணப்படுத்தலாம், எய்ட்சை குணப்படுத்தலாம் என்று 
பரபரப்பான  விளம்பரம் தருபவர். 

ராம்தேவ் சொல்வது எல்லாம் கட்டுக்கதை, அறிவியல் ரீதியாக
சாத்தியமே  இல்லை  என்று இந்திய மருத்துவர் சங்கம் மறுத்துள்ளது. ஆனாலும் விளம்பரங்கள் நின்றபாடில்லை.  பணம் சம்பாதிக்க 
என்ன வேண்டுமானாலும்  செய்யக்கூடிய ஆசாமி இந்த ராம்தேவ். 

ஆயுர்வேத மருந்துகள்  என இவர் தயாரித்து விற்கும் மருந்துகளில்
விலங்குகளின் கொழுப்புகள்  அடங்கியுள்ளது என்று சோதனை செய்த
அறிக்கைகளோடு  இவர் செய்த மோசடிகளை  மார்க்சிஸ்ட் கட்சியின் 
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்ந்தா காரத், மாநிலங்களவையில்  அம்பலப்படுத்தினார்.   அதற்காக மார்க்சிஸ்ட் 
கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தை  ராம்தேவின் குண்டர்கள் 
தாக்கினார்கள். 

பாரத் ஸ்வபிமான் என்ற பெயரில் அரசியல் கட்சி துவக்கி வைத்துள்ள 
இந்த ஆசாமி   இந்தியர்கள் முழுவதும்  சைவ உணவு மட்டுமே சாப்பிட
வேண்டும்  என்று பிரச்சாரம் செய்பவர். ஆனால் இவர் தயாரிக்கும்
மருந்துகளில்  மட்டும் மிருகங்களின்  கொழுப்பைக் கலப்பாராம்.
கலப்படப் பொருட்கள் சட்டத்தின்படி கைது செய்யப்பட வேண்டிய 
இந்த பேர்வழிக்கு பிரதமர் கனவு வேறு வந்து விட்டது. அதனால் ஊழல்
எதிர்ப்பு முழக்கத்தை  எடுத்துள்ளார். இந்தியர்களெல்லாம் இளிச்சவாயர்கள்  என்பதில் என்ன ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை! 

இது போன்ற ஆட்களை அருகில் வைத்தால் அது அண்ணா ஹசாறேவுக்கு  ஆபத்து. கரையான் கட்டி வைத்த புற்றில்  கருநாகங்கள்  குடியேறிய கதை  எத்தனை பார்த்துள்ளோம். நல்ல இயக்கங்களில் 
சில புல்லுருவிகள்  தலைமைப் பொறுப்பிற்கு வந்து அந்த இயக்கத்தையே  நாசப்படுத்துவதையும் சீரழிப்பதையும் எத்தனை முறை 
பார்த்துள்ளோம், வேதனையை  உணர்ந்துள்ளோம். 

ராம்தேவ் போன்ற மோசடிப் பேர்வழிகளை பக்கத்தில் வைத்திருந்தால்
அண்ணா ஹசாராவிற்கும்  ஒரு நாள் வேதனைதான் மிஞ்சும்."""
    


இன்றைய  பதிவு தொடர்கின்றது 

இப்போது  இந்த சாமியாரும்  உண்ணா விரதத்தை  தொடங்கி விட்டார். 
இதற்கு முன்பாக  ஐந்து நட்சத்திர விடுதியில்  மத்திய அமைச்சர்கள் 
இருவர்  பேச்சு வார்த்தை வேறு  நடத்தியுள்ளார்கள்.  கறுப்புப் பணம் மற்றும்  ஊழல் குறித்து  இந்த நபர் வைத்திருக்கும் கோரிக்கைகள் 
பற்றி  விவாதிப்பதை  விட அந்த கோரிக்கைகளை முன் வைக்க இவருக்கு  தகுதியிருக்கிறதா என்று பார்ப்போம்.  




யோகா, ஆயுர் வேதா என்று செய்யும்  மோசடிகள் பற்றி  முன்னரே 
எழுதியுள்ளேன்.  இப்போது கூட உண்ணா விரதம் இருக்கும் ராம் லீலா 
மைதானத்தையே  யோகா வகுப்பு எடுக்கப் போவதாக சொல்லித்தான் 
அனுமதி வாங்கியுள்ளார்.  ஒரு அனுமதி வாங்குவதில் கூட பொய்
சொல்கிற இந்த யோக்கியன்தான்  ஊழலுக்கு எதிராக போராடுகின்றானாம். 


எட்டியூரப்பவையும்  ரெட்டி சகோதரர்களையும் பாதுகாத்து வரும் 
சங் பரிவார அமைப்புக்கள்  இந்த போலிச்சாமியார்  உண்ணா விரத்ததிற்கு  ஆதரவு அளிக்கின்றன.  அயோத்தி மசூதி இடிப்பு 
புகழ் பெண் சாமியார் சாத்வி ரிதம்பரா வேறு அங்கே எழுந்தருளி 
அருள் பாலித்துள்ளார். 


நியாயமான காரணங்களுக்காக விவசாயிகளும் தொழிலாளர்களும் 
நடத்தும்  போராட்டங்களை  கண்டு கொள்ளாத ஊடகங்கள் சாமியார்
உண்ணா விரதம் என்றால் மட்டும்  கேமராவை தூக்கிக் கொண்டு ஒடி 
வந்து விடுகின்றார்கள்.  பிப்ரவரி மாதம்  நாடாளுமன்றம் நோக்கி 
லட்சக்கணக்கான தொழிலாளர்கள்  திரண்ட போது  அச்செய்தியை 
அப்படியே  புறக்கணித்தார்கள். 




போபால் மக்கள் நியாயம் கேட்டு நடத்தும் எத்தனையோ போராட்டங்கள்   புது டெல்லியில்  கண்டு கொள்ளப்படுவதேயில்லை. 




ஆனால்  சாமியார் என்றால் வேறு நியாயம் போலும். மத்தியரசு 
இந்த ஆளை உண்ணா விரதத்தை வாபஸ் வாங்கு என்று தொங்கிக் கொண்டு  இருக்காமல்  அப்படியே  சாகட்டும்  என்று  விட்டு விட வேண்டும். 




இந்த மாதிரி  ஒரு மோசடி ஆசாமி  செத்தால்தான்  டிராமாக்கள் 
குறையும்.  








  

No comments:

Post a Comment