Saturday, June 25, 2011

மன்மோகன் சிங்கிற்கு மரண அடி?

 பஞ்சாப் அசிங்கம்  மன்மோகன் சிங் இப்போது   என்ன சொல்லப்போகிறார்?  என்ன செய்யப் போகிறார்?  


இந்திய நலனில்  அக்கறையற்ற, அமெரிக்காவுக்காகவே 
அதன் முதலாளிகளுக்காவே  வாழும்  இந்திய ஜீவன்  என்ற 
குற்றச்சாட்டு  இந்த மனிதர்  உண்டு. இந்தியாவின் நலன்களை 
புறக்கணித்து,  இறையாண்மையை  அடகு வைக்கிறார்  என்ற 
குற்றச்சாட்டு  அவர் மீது  அழுத்தமாக  எழுந்தது அணு சக்தி 
உடன்பாட்டின் போதுதான்.

அமெரிக்காவில்  காலாவதியாகிப் போன நிறுவனங்கள்  இந்தியாவில்
அணு உலைகள்  அமைக்க வேண்டும்  என்பதுதான்  அமெரிக்க 
அஜெண்டா.  அப்படி  அணு உலைகள்  அமைக்க யுரேனியம் வேண்டும்,
தொழில் நுட்பம் வேண்டும், யுரேனியம் மறு சுழற்சியாக வேண்டும். 
யுரேனியத்தையோ, தொழில் நுட்பத்தையோ  நியுக்ளியர் சப்ளை 
குரூப் என்று  அழைக்கப்படும் நாடுகள்தான்  அளிக்க வேண்டும். 
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டுள்ள நாடுகளுக்கு   மட்டுமே  அளிப்பது  என்பது  அவர்களின் நிலை. 



அணு சக்தி ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டால் சர்வதேச அணு சக்தி
முகமை, இந்தியாவின்  அணு உலைகளை  சோதனை செய்யும் 
உரிமையை  வழங்கினால்  யுரேனியம் கிடைக்கும்  என்று  அமெரிக்கா
ஆசை வார்த்தை  சொன்னது, அண்ணனும் மயங்கிப் போனார்.



போகாதே, உன்னை நம்ப வைத்து கழுத்தறுத்து விடுவார்கள்  என்று 
மார்க்சிஸ்ட் கட்சி  எச்சரித்தது, ஆதரவையும்  விலக்கிக் கொண்டது. 
கோடிகளில் செலவு செய்து  நாற்காலியை  காப்பாற்றிக் கொண்டு 
வேகம் வேகமாக  கையெழுத்தும் போட்டு விட்டார். 



அணு உலைகளில்  விபத்து  ஏற்பட்டால்  சொற்பத்தொகையிலும் 
அற்பத் தொகை இழப்பீடு  அளித்தால் போதும்  என்றும் சொல்லி விட்டது. 



ஆனாலும்  பாவம், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்து 
போடாத இந்தியாவிற்கு நோ யுரேனியம், நோ தொழில் நுட்பம் என்று 
சொல்லி விட்டது. ஆனால் அணு உலை சோதனை மட்டும் நீடிக்கும். 
ஆக மிகப் பெரிய அடி, அல்வா எல்லாமே மன்மோகன் சிங்கிற்கு 
கிடைத்து விட்டது. 



ஹிந்து பத்திரிகை மிக அருமையாக ஒன்று எழுதியிருந்தார்கள் 



"இந்தியாவின் மீதான எல்லா தடைகளும் நீங்கி விடும் என்று 
மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் சொன்னார். ஆனால் 
தடைகளை மீண்டும் விதிக்கக்கூடாது என அவர் அமெரிக்காவிடம் 
கேட்கவில்லை போலும்."


ஊழல் பற்றி பேசும் அண்ணா ஹசாரே  வகையறாக்கள்  இது போன்ற
விஷயங்கள்  பற்றி எல்லாம்  கவலைப்பட மாட்டார்களா? 
  

No comments:

Post a Comment