மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே ஆட்சியை கவிழ்க்க சிவசேனை கட்சியை உடைக்க ஏக்நாத் ஷிண்டேவை தூண்டி அதற்கான ஊக்கப் பரிசாக அவரை முதலமைச்சராக்கியது.
சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகி ஷிண்டேவை துணை முதல்வராக்கி விட்டார்கள்.
பீகாரில் ஐக்கிய ஜனதாதள் கட்சியின் நிதீஷ்குமாரைத்தான் முதலமைச்சராக்கினார்கள். இப்போது அவரை மாநிலங்களவைக்குத் துரத்தி விட்டு பாஜகவின் கல்வித்தகுதி மோசடி சாம்ராட் சவுத்ரியை முதல்வராக்கி விட்டார்கள்.
நாளை அதிமுக வென்று எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானால் கூட பின்பு அவரை கழற்றி விட்டு தமிழிசையையோ, ஆட்டுக்காரனையோ, எச்.ராசாவையோ ஏன் கே.டி.ராகவனையோ கூட பாஜக முதல்வராக்கி விட்டு எடப்பாடியை துணை முதல்வராக்கி விடுவார்கள்.
அப்படிப்பட்ட இழி நிலை எடப்பாடிக்கு வரலாமா?
அதை நாம் அனுமதிக்கலாமா?
அதனால்
இப்போதே தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை (அதிமுக கூட்டணி என்று எடப்பாடிதான் சொல்லிக் கொண்டிருக்கிறார். கோபாலகிருஷ்ணன் கிடையாது சப்பாணிதான் என்று பாஜக என்.டி.ஏ என்றே சொல்கிறார்கள்) முற்றிலுமாக தோற்கடிக்க வேண்டும்.
நிர்மலா அம்மையாரின் கணவர் பரகால பிரபாகர் "ஜீரோ பாஜக" என்றொரு முழக்கத்தை கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அது
ஜீரோ என்.டி.ஏ, ஜீரோ பாஜக, ஜீரோ அதிமுக, ஜீரோ பாமக, ஜீரோ தவெக
என்றே அமைய வேண்டும்.
தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக அதிமுக-பாஜக கூட்டணியை வீழ்த்திடுவோம்.

ச்சப்புனு அறைய எடப்பாடிக்கு தைரியம் இருக்கா?
ReplyDeleteஹாஹா. அப்படி எடப்பாடி செஞ்சா அவரை பாராட்டி ஒரு பதிவு எழுதுவேன்.
Delete