புதிய நீதிக்கட்சி வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் மதுரை மத்தி தொகுதியில் போட்டியிடும் பாஜக பொறுப்பாளர் குஷ்புவின் கணவர், இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி, தான் எம்.எல்.ஏ ஆனால் மதுரை மத்திய தொகுதியில் அசைவ விடுதிகளை மூடி மீனாட்சி அம்மன் கோயில் புனிதத்தை பாதுகாப்பேன் என்று பேசியதாக ஒரு செய்தி உலாவியது.
பிரபலமான அசைவ விடுதிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மதுரையில் இப்படியெல்லாம் பேசுமளவிற்கு சுந்தர்.சி மோசமான சங்கியா என்று சின்ன சந்தேகம் வந்தாலும் அந்த செய்தியை உறுதிப்படுத்தாமல் பதிவு எழுத வேண்டாம் என்றிருந்தேன்.
அந்த செய்தி சரியில்லை என்றும் தன் வெற்றிக்குப் பிறகு அச்செய்தியை பரப்பியவர்களுக்கும் சேர்த்து கறி விருந்து கொடுப்பேன் என்று சுந்தர்.சி பேசியுள்ளார்.
ஆனால் திரு சுந்தர் அவர்களே, நீங்கள் வெற்றி பெறப் போவதுமில்லை. யாருக்குமே கறி விருந்துமே தரப் போவதில்லை.இந்த தேர்தல் காரணமாக கமலஹாசன் தயாரித்து, ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை இழந்து விட்டேனே என்று நீங்கள் புலம்பப் போவது மட்டுமே நடக்கப் போகிறது.
பாவம் ஏ.சி.சண்முகம்! இது நாள் வரை வேலூர் மக்களவை தொகுதியில் அவர் போட்டியிட்டு கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளார், அதனை மாணவர்களிடமிருந்து வசூலித்து விடுவார் என்பது வேறு.
தனக்காக பணத்தை இழந்த அவர், முதல் முறையாக உங்களுக்காக பணத்தை இழக்கப் போகிறார்.


No comments:
Post a Comment