Tuesday, April 7, 2026

மம்தா அண்ணன் மகன் செஞ்சதுதான் விஜய்

 


தன்னைப் போன்ற உருவச்சிலைகளை செய்து அவற்றை பிரச்சாரத்திற்கு அனுப்பி வைத்துள்ளதுதான் விஜய் இன்று கொடுத்துள்ள கண்டெண்ட்.


எந்திரன் படத்தில் சிட்டி ரோபோ க்கள் வரிசையாக நிற்பது போல விஜய் சிலைகள் நிற்பதைப் பார்த்தால் காமெடியாகத்தான் இருக்கிறது.


ஆனால் இது ரொம்பவே பழைய டெக்னிக்.

2019 மக்களவைத் தேர்தலின் போதே மம்தா பானர்ஜியின் அண்ணன் மகன் அபிஷேக் பானர்ஜி கடைபிடித்த டெக்னிக்தான். 

அப்போது எழுதிய பதிவு உங்கள் தகவலுக்காக.

Monday, April 29, 2019

பிரச்சாரத்துக்கே இப்படி! ஜெயிச்சா எப்படி?



அபிஷேக் பானர்ஜி. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர். டைமண்ட் ஹார்பர் தொகுதியில் போட்டியிடும் இவர் மம்தா பானர்ஜியின் சொந்தக் காரரும் கூட.

பிரச்சாரத்தில் வெயிலில் அலைய முடியவில்லை என்பதற்காக அவருடைய சிலை ஒன்றை ப்ளாஸ்டர் ஆப் பாரிஸில் செய்து, அந்த சிலையை ஜீப்பில் வைத்து பிரச்சாரம் செய்கிறார்கள்.

பிரச்சாரத்தின் போது ஓட்டு கேட்பதற்காகக் கூட மக்களை சந்திக்க வராத இந்த சொகுசுப் பேர்வழி எல்லாம் ஜெயிச்சால் மட்டும் என்ன பிரயோஜனம்?

அந்த தொகுதி மக்களுக்கு இதையெல்லாம் யோசிக்கிற அளவுக்கு சொரணை இருக்குமா?

விஜய் அவருடைய லெவலுக்கு இன்னும் புதுமையாய் ஏதாவது யோசித்திருக்கலாம்.

பிகு: அதே 2019 தேர்தலின் போது டெல்லியில் ஒரு வேட்பாளர், அவருக்கு பதிலாக டூப் ஒருவரை வேனில் நிற்க வைத்தார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அது டூப்பெல்லாம் இல்லை, நான் ஜீப்பிற்குள் ஓய்வு எடுத்த போது அவர் சும்மா மேலே நின்று வாக்காளர்களைப் பார்த்து சும்மா வேட்பாளர் போல சும்மா கை காட்டினார் என்று அந்த ஒரிஜினல் வேட்பாளர் சமாளித்தார். 

அவர் யார் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் சங்கி கௌதம் கம்பீர் . . . .

No comments:

Post a Comment