Friday, April 3, 2026

சகவாச தோஷமா செங்கோட்டையன்?????

 


ஏ1 காலத்து முன்னாள் மந்திரியும் தற்போதைய தற்குறி தவெக கூட்டத்தில் உள்ளவருமான செங்கோட்டையனின் மீது பெரிய அபிப்ராயம் எதுவும் எப்போதும் இருந்தது கிடையாது. வாச்சாத்தி பிரச்சினையை கையிலெடுத்து போராடியதற்காக எங்கள் தோழர், மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் அவர்களை கொலை செய்ய திட்டமிட்டவர் அல்லவா அவர்! 

(பார்க்க : விஜய்-செங்கோட்டையன் கொலைகாரக் கூட்டாளிகள்

புஸ்ஸி ஆனந்த் சில மாதங்கள் முன்பாக அபத்தமாக உளறிய ஒன்றை இவரும் உளறியுள்ளார். 

அது என்ன?


நீண்ட காலம் எம்.எல்.ஏ ஆக, அமைச்சராக இருந்ததால் கொஞ்சமாவது விஷயம் தெரிந்தவராக இருந்திருப்பார் என்று நினைத்திருந்தேன். 

ஆனால் ?????

புஸ்ஸி ஆனந்த் உளறிய போது எழுதிய பதிவை மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

ஜெயலலிதா ஆகப் போகிறாரா விஜய்?

ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதன் காரணமாக வேட்பு மனு நிராகரிக்கப் பட்டது என்று பதிவாகக்கூடாது என்பதற்காக நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தவர் ஏ1.

ஏ1 4 இடங்களில் வேட்பு மனு தாக்கல் செய்தாரே தவிர, போட்டியிடவில்லை. போட்டியிடும் வாய்ப்பு நிராகரிக்கப்பட்டது என்பதுதான் உண்மை.

முழுப்பூசணியை சோற்றில் மறைப்பது போல செங்கோட்டையன் பேசியதன் காரணம் என்ன?


ஆரம்பத்திலிருந்தே இப்படித்தானா அவர்?

அல்லது

தவெக தற்குறிகளின் சகவாசத்தால் இப்படி ஆகி விட்டாரா?



No comments:

Post a Comment