Saturday, April 25, 2026

AAP - பிய்ந்த துடைப்பம்


 
அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் பத்து பேரில் ஏழு பேர் அங்கிருந்து பாஜகவிற்கு தாவி தங்களை மோடி வாஷிங் மெஷின் மூலமாக புனிதமாக்கிக் கொள்கிறார்கள். 

ஆம் ஆத்மி கட்சி ஊழல் கட்சியாகி விட்டது என்று அவர்கள் குற்றம் சுமத்துவது உண்மையாக இருக்கலாம். அதற்காக அவர்கள் சென்று சேருமிடம் பாஜக என்பதுதான் காமெடியாக இருக்கிறது.

கட்சித்தாவல் தடைச்சட்டம் என்பது இன்னொரு காமெடி.

யாரும் தனியாக கட்சி மாறக்கூடாது. மூன்றில் ஒரு பங்கு ஆட்களோடுதான் கட்சி மாற வேண்டும் என்ற விதி பாஜகவிற்கு மட்டுமே உதவிக் கொண்டிருக்கிறது.

இந்த கட்சித்தாவல் சில உண்மைகளை உணர்த்தி விட்டு போயுள்ளது.

எந்த வித கொள்கையும் இல்லாமல் வெற்று முழக்கங்கள் மூலம் உருவாகும் கட்சி கண்ணாடி போன்றது. எப்போது வேண்டுமானாலும் சர்வ சாதாரணமாக நொறுங்கிப் போகும். எதிர்கால தவெக நிலைக்கு இது ஒரு முன்னோட்டம்.

கொள்கைகள் அற்ற கட்சியின் உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது பாஜகவிற்கு மிகவும் சுலபம் என்று தெரிகிறது.

இப்போது தேர்தல் நடக்கும் மாநிலங்களில் எதிர்காலத்தில் பாஜக என்ன செய்யும் என்பதற்கான முன்னோட்டம் இந்த சம்பவம்.

ராகவ் சாதா என்ற அந்த சின்ன பையனுக்கு ராஜ்ய சபை துணைத்தலைவர் பதவி கொடுத்தது கேஜ்ரிவாலின் முதல் தவறு. அதை பறித்த முறை இன்னொரு தவறு. ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்ய சபை உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டி அங்கே பதவியை பறிப்பதற்கு பதிலாக ராஜ்யசபை தலைவருக்கு கடிதம் அனுப்பியது ஜனநாயக நடைமுறை அல்ல. அப்போதே சிக்கல் வரும் என்று நினைத்தேன். 

அதை விட கேஜ்ரிவால் எடுத்த இன்னொரு முயற்சி அவரை பலி வாங்கும் என்று அச்சப்பட்டேன். அதுதான் நடந்துள்ளது. 

அது என்ன முயற்சி?

நாளை பார்ப்போம். 

No comments:

Post a Comment