Monday, October 5, 2020

இன்ஸ்டன்ட் காபியில் இவ்ளோ கொள்ளையா?

 


தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான தோழர் பெ.சண்முகம் அவர்களின் கேள்வி இது.

பில்டர் காபிக்கான காப்பித் தூள் (சிக்கரி சேர்க்காமல்)  அரைக் கிலோ இருநூற்றி இருபது ரூபாய்தான். இன்ஸ்டன்ட் காபி பயன்படுத்தாத காரணத்தால் இந்த கொள்ளை இது நாள் வரை தெரியவில்லை. பெரும்பாலான இன்ஸ்டன்ட் காபித் தூள்களில் சிக்கரியின் சதவிகிதம் 30 % லிருந்து 40 % வரை இருக்கும். 

அதையும் சேர்த்துப் பார்த்தால் அநியாயக் கொள்ளைதான். ஆனால் இதன் பலன் விவசாயிகளுக்குச் செல்லவில்லை, இனியும் செல்லாது என்பதுதான் கொடுமை. 



திரு.மோடி அவர்களே, விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ காபி கொட்டையை131ரூபாய் க்கு வாங்கி நெஸ்லே கம்பெனிகாரன் ஒரு கிலோ காப்பி தூள்11299 ரூபாய் என்றும் அமேசான் மூலம் வாங்கினால்42%கழிவு போக 6699 ரூபாய் என்றும் நுகர்வோருக்கு விற்பனை செய்கிறார்களே இந்த பகாசூர பகல்கொள்ளையை உங்களின் வேளாண் சட்டம் எந்த வகையில் தடுக்கும்?விளக்குவீர்களா?

பிகு: படத்தில் உள்ள விலையைப் பார்த்து நீங்கள் சொல்வது தவறு என்று யாரும் பின்னூட்டம் போட வேண்டாம். அது நூறு கிராம் பாட்டில். தோழர் சண்முகம் ஒரு கிலோவிற்கான விலையை சொல்லியுள்ளார். 

2 comments:

  1. கொள்ளை!
    கொள்ளை!
    கொள்ளையோ
    கொள்ளை!

    அடுத்ததாக,
    11,299 என்பது 11,990 எனவும்
    6,699 என்பது
    6,990 எனவும் இருக்க வேண்டும்!

    ReplyDelete
  2. கொள்ளை!
    கொள்ளை!
    கொள்ளையோ
    கொள்ளை!

    அடுத்ததாக,
    11,299 என்பது 11,990 எனவும்
    6,699 என்பது
    6,990 எனவும் இருக்க வேண்டும்!

    ReplyDelete