Thursday, October 1, 2020

பேயரசு ஆட்சியில் மாட்டுக்குத்தான்

 


மோடி, அமித் ஷாவை விட, நேற்று கோர்ட்டால் பூரண கும்ப மரியாதையோடு விடுதலை செய்யப்பட்ட அத்வானி வகையறாக்களை விட மிகப் பெரிய கொடூரன் மொட்டைச் சாமியார்.

பாஜக எம்.எல்.ஏ தன் மகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி விட்டார் என்று நியாயம் கேட்டு வந்த தந்தையை லாக்கப்பில் அடித்துக் கொன்ற உத்தமன்.

உத்தரப் பிரதேச மாநிலம், பாலியல் வன் முறைகளின் களமாக மாறிய போதும் பசுவிற்கு பூஜை செய்து ஆண்களை (பாஜகவைச் சேர்ந்த) பொலி காளைகளாக திரிய அனுமதித்த பசு நேசன்.

இப்போது இன்னொரு கொடுமை. 

ஒரு பெண் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறாள். அவளது முதுகெலும்பு உடைக்கப்படுகிறது. நாக்கு அறுக்கப்படுகிறது. அவள் இறந்து போகிறாள். அவளது உறவினர்களை ஒரு அறையில் பூட்டி வைத்து விட்டு சடலத்தை போலீஸே எரித்து விடுகிறது.

பாஜக ஆட்சியின் லட்சணம் இதுதான் என்று சொன்னால் அவர்களை உள்ளே தூக்கிப் போட்டு விடுவார் மொட்டைச் சாமியார்.

இந்த கொடுமையை எல்லாம் எந்த ஒரு ஊடகமும் பேசாது. சுஷாந்த் தற்கொலையை விட இந்தியாவில் வேறெந்த பிரச்சினையும் அவர்களுக்கு முக்கியமே கிடையாது. 

ஆமாம், அந்த ஆட்சி மனிதர்களுக்கானது அல்ல. மாடுகளுக்கானது.

பாஜக கட்சியே மனிதர்களுக்கான கட்சி கிடையாதே. அங்கே இருப்பவர்கள் கூட யாரும் மனிதர்கள் கிடையாதே!

No comments:

Post a Comment