Friday, October 2, 2020

பூ தூவவே வேண்டாம் மோடி

 





 

கொலைகாரன் கோட்சேவை
மனதில் ஏந்தி
காந்தியின் படத்திற்கு
மலர் தூவவே வேண்டாம் மோடி.
 
சுதந்திரத்தின் அடையாளம் அவர்,
தரகன் நீ பூ தூவினால்
அது நரகல் நெடிதான் அடிக்கும்.
 
எளிமையாய் திகழ்ந்தவர் அவர்.
பதினைந்து லட்ச ரூபாய்
கோட்டு போடும் படோடாபக்காரன்
தூவும் மவரெல்லாம் அவருக்கு முள்ளே.
 
மத நல்லிணக்கத்திற்காக
உயிர் கொடுத்தவர் அவர்.
மத வெறியில் உயிரெடுக்கும்
படுபாவி நீ தூவும் மலரிலும்
நீ கொன்று குவித்தவர்
ரத்தம் தோய்ந்திருக்கும்!
  
மத நல்லிணக்கம்,
மக்கள் ஒற்றுமை,
சுய சார்புப் பொருளாதாரம்,
கிராமப்புற வளர்ச்சி
என எத்தனையோ 
அடையாளம் அவருக்கு
இருந்தாலும் 
துடைப்பத்தை மட்டுமே
அவரது அடையாளமாய்
மாற்ற முயன்றாய் . . .

நாடாளுமன்ற ஜனநாயகத்தை
கொலை செய்த 
ரத்தக் கரங்களோடு
அதே கட்டிடத்தில்
கோழை சாவர்க்கர் எதிரில்
உள்ள காந்தியின் படத்திற்கு
நிச்சயம் பூ தூவவே வேண்டாம் , , ,

No comments:

Post a Comment