Saturday, November 2, 2019

அவரு அவங்க பாக்கெட்டில்தான்.



உடன்பாடு ஏதும் வராவிட்டால் மகாராஷ்டிராவில் வராவிட்டால் ஜனாதிபதி ஆட்சிதான் அமலாகும் என்று பாஜக தலைவர் ஒரு மிரட்ட பிரச்சினை சூடு பிடித்துள்ளது.

ஜனாதிபதி யார் தெரியுமா? அவர் அரசியல் சாசனத்தலைவர், முதல் குடிமகன், இத்யாதி, இத்யாதி என்றெல்லாம் எழுதி விட்டு அவர் என்ன பாஜகவின் பாக்கெட்டில் இருப்பதாக நினைப்பா என்றெல்லாம் சிவசேனாவின் பத்திரிக்கை சாம்னா தலையங்கம் எழுதியுள்ளது.

பாஜகவோடு கூட்டணி வைத்துள்ள ஒரு ஆட்சியின் அரசியல் அறிவு கண்டு அப்படியே  புல்லரித்துப் போனேன்.

பாஜகவின் பாக்கெட்டில் இல்லாமல் வேறு எங்கே இருக்கிறாராம்?

போன நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஒன்று போதுமே மக்களவைக்கு வருமுன்னரே கையெழுத்திட்ட காஷ்மீர் மசோதா உட்பட  நீட்டிய இடத்தில் கையெழுத்திட்டு அவர் இருப்பிடம் என்னவென்று சொன்னதே!

1 comment:

  1. அவர் சொல்வதை எல்லாம் கேட்பார் என்பதற்காகத் தானே அவர் ஜனாதிபதியாக என்பதற்காக ஆக்கப்பட்டார்.

    ReplyDelete