Sunday, November 17, 2019

நேருவே காரணம். நிர்மலா அல்ல . . .


என்னமோ நேருவிற்கு தொலை நோக்கு பார்வை இருக்கு, அதனால்தான் இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினதா பீற்றிக் கொள்கிறீர்களே, 

நிஜமாகவே அவருக்கு தொலை நோக்கு பார்வை இருந்திருந்தால்,  நரசிம்மராவ், வாஜ்பாய், மன்மோகன், மோடி போன்றவர்கள் ஆட்சிக்கு வருவார்கள், அவர்கள் பொதுத்துறை நிறுவனங்களை விற்பார்கள் என்று தெரிந்திருக்குமல்லவா? 

இன்று பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படுவதற்கு அவற்றை உருவாக்கிய நேருதான் காரணமே தவிர, அதை விற்கிற மோடியோ, நிர்மலாவோ காரணமல்ல. 

அவற்றை நேரு உருவாக்காமல் இருந்திருந்தால் மோடியாலும் நிர்மலாவாலும் அவற்றை விற்க இயலுமா? தேசத்தின் சொத்துக்களை விற்கிறார்கள் என்ற அவப்பெயரும் அவர்களுக்கு வந்திருக்காதே!

பாவங்க அவங்க!


3 comments:

  1. இதுதான் வஞ்சபுகழ்ச்சி

    ReplyDelete
  2. ரொம்ப பாவங்க

    ReplyDelete
  3. சிறப்பாகச் சுட்டுறியள்!

    ReplyDelete