Friday, November 29, 2019

வெடிகுண்டு சாமியாரை மட்டுமல்ல . . .


மக்களவையில் "கோட்ஸே புகழ்" பாடிய காரணத்தால் வெடிகுண்டு சாமியார் மீது பாஜக நடவடிக்கை எடுத்துள்ளதாம். பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து அவரை நீக்கியதே அந்த நடவடிக்கையாம்.

வெடிகுண்டு சாமியார் பிரக்யாசிங் தாகூர் மட்டுமா குற்றவாளி?

நீக்கப்பட வேண்டியவர்கள். நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவர்கள் பட்டியல் மிகவும் பெரியது.

வெடிகுண்டு வழக்கில் சிறையில் இருந்த போலிச்சாமியாருக்கு நாடாளுமன்றத்தில் போட்டியிட இடம் கொடுக்கச் சொன்ன நாக்பூர் குருபீடம், 

போட்டியிட வாய்ப்பு கொடுத்த மோடி, அமித்து வகையறாக்கள்,

ஊரறிந்த கொலைக்குற்றவாளிக்கு வாக்களித்த போபால் தொகுதியின் முட்டாள் வாக்காளர்கள்.

கோட்சே புகழ் பாடியதை பதிவு செய்யாமல் மறைத்த மக்களவைத் தலைவர்.

அவர் ஒன்றும் கோட்சே பற்றி பேசவில்லை, உத்தம்சிங் பற்றி பேசினார் என்று பொய் சொல்லி திசை திருப்பி முட்டு கொடுக்க முயற்சித்த நாடாளுமன்றத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி.

இப்படி பட்டியல் மிகப் பெரியது.

வெடிகுண்டு சாமியார் மீது எடுக்க வேண்டிய சரியான நடவடிக்கை என்பது 

அவரது எம்.பி பதவியை பறித்து பிணையை ரத்து செய்து மீண்டும் சிறைக்கு அனுப்புவதுதான்.




No comments:

Post a Comment