Sunday, September 10, 2017

மதுரா சாமியாரும் அனாமதேயங்களும்





பல வருடங்களுக்கு முன்பு டெல்லிக்கு பயணம் சென்றிருந்தபோது பணிக்கர் டிராவல்ஸில் ஆக்ரா, மதுரா, பிருந்தாவன் ஒரு பேக்கேஜ் டூர் சென்றிருந்தோம்.

மதுராவில் உள்ள டால்மியா மந்திருக்கு (அது கிருஷ்ணன் கோயில் என்றாலும் டால்மியாவால் கட்டப்பட்டதால் டால்மியா மந்திர் என்றுதான் உள்ளூர் மக்கள் அழைக்கிறார்கள். டெல்லியிலும் ஹைதராபாத்திலும் உள்ள பிர்லா மந்திர் நினைவுக்கு வருகிறதா?) போய் விட்டு பேருந்தில் அமர்ந்த பின்பு  பேருந்தில் ஒரு சாமியார் ஏறினார்.

முஸ்லீம்களால் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை எப்படி டால்மியா புத்திசாலித்தனமாக வாங்கி மந்திர் கட்டினார் என்று சொல்லி விட்டு பக்கத்தில் உள்ள மசூதியை இடித்து விட்டு அங்கேயும் மந்திரை விரிவு படுத்த காணிக்கை தாருங்கள் என்று கேட்டு துண்டோடு ஒவ்வொரு சீட்டாக வந்தார் (உண்டியல் குலுக்கிகள் என்று சொல்பவர்களே, அந்த சாமியாரை துண்டு குலுக்கி என்று அழைக்கலாம்தானே. ஒவ்வொரு பேருந்திலும் ஒரு சாமியார் ஏறி துண்டேந்துவார். இது காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது.) 

அந்த சாமியார் ஆங்கிலத்தில்தான் பேசினார். அதனால் அவரை சில கேள்விகள் சூடாகவே கேட்டேன். அவரோ ஒன்றும் புரியாமல் திருதிருவென முழித்தார். எங்கள் பேருந்தின் கைட் அவருக்கு ஹிந்தியில் மொழி பெயர்த்ததும் கோபமாக முறைத்து விட்டு பேருந்தை விட்டு இறங்கி விட்டார். 

"அந்தாளுக்கு இங்கிலிஷெல்லாம் தெரியாது. அவருக்கு சொல்லிக் கொடுக்கப் பட்டததை அப்படியே சொல்லி விட்டு  காசை வாங்கிக் கொண்டு போய் விடுவார். இவர்களை அனுமதிக்காவிட்டால் எங்களுக்கு தேவையில்லாத பிரச்சினைகள் வரும். இது தினமும் நடக்கும் கூத்து" என்று அந்த கைட் பிறகு விளக்கமாக சொன்னார்/

மோடி பற்றியோ அவரது ஆட்சியின் அலங்கோலங்கள் பற்றியோ எழுதினால் அவருக்கு முட்டு கொடுக்க வரும் அனாமதேயங்கள் 

நீ சீனாவின் அடிமை
சீனாவிடம் சொல்,
சீனாவில் நடந்தது என்ன?

என்று ஒரே டயலாக்கையே மீண்டும் மீண்டும் எழுதி போரடிக்க வைப்பதை பார்க்கையில் எனக்கு அந்த மதுரா சாமியார்தான் நினைவுக்கு வந்தார். 

பாவம் அவங்க கிட்ட சரக்கு அவ்வளவுதான் போல!!!!
வைச்சுக்கிட்டா வஞ்சனை செய்யறாங்க?
மூளையே இல்லாதவங்களை இந்த அளவு மூளைச்சலவை செஞ்சதே பெரிய விஷயம்?

ஆமாம். மூளையுள்ள எவனாவது காவிங்களை ஆதரிப்பானா?
 

6 comments:

  1. மூளை மற்றும் மனசாட்சி இது இரண்டும் மக்களுக்கு ஒழுங்காக செயல்பட்டால், காவிகள் காணாமல் போய்விடுவர். Pity is, people have forgotten the existence of those two faculties....the agenda of mass hypnotism and brainwashing by the Mo(Ke)di dharbar has blinded the people

    ReplyDelete
  2. மூளையுள்ள எவனாவது காவிங்களை ஆதரிப்பானா**************** will any sane person write like this? communists are cancer to India and its progress. None should rest till that evil forces are destroyed.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறீர்களே பெரியவரே . . .
      அயோக்கியர்களும் திருடர்களும் சுரண்டல்பேர்வழிகளும் அடிப்படைவாதிகளும்
      மத வெறியர்களும் மட்டுமே கம்யூனிஸ்டுகளை எதிர்ப்பார்கள்.
      இதிலே நீங்கள் யார் சார்?
      ஏதாவது ஒன்றா? இல்லை எல்லாமுமா?

      Delete
  3. மந்திரை விரிவு படுத்த காணிக்கை தாருங்கள் என்று கேட்டு துண்டோடு ஒவ்வொரு சீட்டாக வந்தார் (உண்டியல் குலுக்கிகள் என்று சொல்பவர்களே

    kikikee....

    unglukkey...key
    palagiduchu pola..!

    ReplyDelete
  4. பாவம் அவங்க கிட்ட சரக்கு அவ்வளவுதான் போல!!!!
    வைச்சுக்கிட்டா வஞ்சனை செய்யறாங்க?
    மூளையே இல்லாதவங்களை இந்த அளவு மூளைச்சலவை செஞ்சதே பெரிய விஷயம்?

    self declaration pola ji!!

    ReplyDelete
    Replies
    1. மண்டையை மறைக்க நினைத்தாலும்
      உன்னால் கொண்டையை மறைக்க முடியாது.
      எழுதப்பட்ட நேரமே
      உன் பித்து பிடித்த மனதின் சாட்சி.
      என்றுமே நேர்மையாக செயல்பட முடியாத
      கேவலமான மனிதனாக மாறியதற்கு
      என் அனுதாபங்கள்.

      Delete