Monday, December 28, 2015

எரிந்து போன சண்டி ஹோம பந்தலும் அமைதிப்படை அமாவாசையும்






பல கோடி ரூபாய் செலவில் மஹா சண்டி ஹோமம் நடத்தினார் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகரராவ். ஆனால் அவர் மீது கடவுளின் அருட்பார்வை விழவில்லை போலும். அவரின் ஹோமத்தின் மீது என்ன கோபமோ? அக்கினி பகவான் ஹோமத்திற்காக போடப்பட்ட அனைத்து பந்தல்களையும் எரித்து விட்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ஜனாதிபதியின் ஹெலிகாப்டர் செய்தியறிந்து அப்படியே திரும்பிப் போய் விட்டது.

என் கவலையே கேசிஆரின் ஆலோசகர்கள் அடுத்து அவருக்கு என்ன ஆலோசனைகள் தருவார்களோ என்பது பற்றித்தான்.

ஏதோ தோஷம் இருப்பதால்தான் இப்படியாகி விட்டது. எனவே தோஷ நிவர்த்தி பிராயச்சித்த ஹோமம் நடத்த வேண்டும் என்று இன்னொரு ஹோமம் நடத்தி கல்லா கட்டுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

என் கவலை அது கூட கிடையாது.

அமைதிப்படை கிளைமாக்ஸில் அமாவாசை புடவை கட்டி ஒரு காதில் மட்டும் தோடு அணிந்து வருவது போல வர வேண்டும் என்று சொல்லி விட்டால் அவர் கதி என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள்.

ஆந்திராவில் ஏற்கனவே நடந்ததைத்தான் அமைதிப்படையில் காண்பித்தார்கள் என்று வேறு சொல்லியிருக்கிறார்கள்.

பாவம் தெலுங்கானா மக்கள்!!!!


3 comments:

  1. இந்த மகா யாக விபரங்களை படிக்க தலையே சுற்றுகிறது.

    ReplyDelete
  2. MR CHANDRASEKAR RAO IF YOU WANT PERFORM HOMAM DO IT WITH YOUR COST NOT AT THE COST OF THE
    GOVT. THE MOST BENEFICIAL PERSON WHEN TELANGANA WAS CREATED IS NOT THE PEOPLE OF TELANGANA
    BUT MR RAO AND HIS FAMILY MEMBERS AND HIS TRS PARTY MEMBERS. I PITY THE PEOPLE OF
    TELANGANA WHO BELIEVED MR RAO.

    ReplyDelete
  3. இதற்கு செலவு ஏழு கோடி ரூபாயாம்
    கொடுமை கொடுமை

    ReplyDelete