Wednesday, December 30, 2015

ஜில்லுனு பிரெட் ரோல் சோமாஸ்




இது முழுக்க முழுக்க எனது கண்டுபிடிப்பு என்று சொல்ல முடியாது. எங்கோ படித்ததை பெருமளவு மாற்றியது என்ற பெருமிதப்பட முடியும்.

முதலில் செய்ய வேண்டியது – பொட்டுக்கடலை, தேங்காய் ஆகியவற்றை தனித்தனியே வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றோடு சர்க்கரை சேர்த்து நன்றாக மிக்ஸியில் பொடி செய்து கொள்ள வேண்டும். சின்னதாக உடைத்த முந்திரி, திராட்சை இவற்றை நெய்யில் வறுத்து இந்த கலவையோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.


 பிறகு பிரெட்டை சப்பாத்திக் கல்லில் வைத்து ஒரு முறை குழவியால் ஓட்டி பிறகு கலவையை இதற்குள் வைத்து மூடவும். பிறகு அலுமினியம் பாயில் பேப்பரால் சுற்றி வைக்கவும். அனைத்து பிரெட்டுகளிலும் இது போல செய்த பின்பு அவற்றை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து ஃப்ரீஸரில் ஒரு மூன்று மணி நேரம் வைக்கவும்.


பிறகு வெளியே எடுத்து கத்தியால் இரண்டு பாகமாக வெட்டி, மேலே ஒரு செர்ரிப் பழத்தை வைத்து கொடுக்கவும்.

பிரெட்டை விட கலவை அதிகமாகி விட்டது. ஆனாலும் அதற்காக கவலைப்படவில்லை. நெய்யை சூடாக காய்ச்சி மாவின் மீது ஊற்றி உருண்டையாகவும் பிடித்தாகி விட்டது.

ஆக ஒரே நேரத்தில் இரண்டு இனிப்புக்கள்

1 comment:

  1. ஒரு கல்லில் இரண்டு மாங்காய் :) நல்லாக உள்ளது, விளக்காமகவும் இருக்கிறது.
    புது வருட வாழ்த்துக்கள்.

    ReplyDelete