Sunday, April 7, 2013

நாற்றமடிக்கும் இந்த அசிங்கம் பிடிச்சவனெல்லாம் ஒரு அமைச்சர்....





மஹாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்வரும் 
மத்திய அமைச்சர் சரத் பவாரின் சொந்தக்காரனுமான
அஜய் பவார்தான் அந்த அசிங்கம் பிடிச்ச மந்திரி.

தனது நிலத்திற்கு விவசாயம் செய்ய அணையில்
இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று ஒரு
விவசாயி  ஐம்பத்தி ஐந்து நாளாக உண்ணாவிரதம்
இருந்து வருகிறார்.

அதற்கு இந்த கேடு கெட்டவன் சொல்லியுள்ள
கேவலமான விஷயம் என்ன தெரியுமா?

" இந்த சோலாபூர் விவசாயி உண்ணாவிரதம் இருக்கிறான்.
அணையில் தண்ணீர் இல்லையென்றால் என்ன செய்வது?
சிறுநீரைக் கழித்தா அணையை திறப்பது? தண்ணீர்
பஞ்சத்தில் சிறுநீர் வருவது கூட கஷ்டமாக உள்ளது "

இவன் புத்தியைப் போலவே பேச்சும் நாற்றமடிக்கிறது.

இதோடு நிறுத்திக் கொள்ளவில்லை.

" மின்வெட்டு பிரச்சினை காரணமாக மக்கள்தொகை
உயர்ந்து கொண்டு வருகிறது என்பது மட்டும் எனக்கு
தெரியும்"

இதைச் சொன்னது ஒரு பொதுக்கூட்டத்தில்.

இதற்கு அந்த கட்சிக்காரர்கள் சிரிக்க வேறு சிரித்துள்ளார்கள்..

உடனே அவன் மீண்டும் சொல்லியுள்ளான.

" நான் காலையிலேயே தண்ணியடித்து விட்டு வந்து விட்டேன்
என்று  நீங்களெல்லாம்  நினைக்கிறீர்கள். "

அதற்கு வெட்கம் கெட்ட கட்சிக்காரர்களும் மீண்டும் சிரித்து
ஆரவாரம் செய்துள்ளார்கள்.

இவர்கள் இப்படி சிரிக்கிறார்கள்.
மக்களின் பிழைப்பும்  சிரிப்பாய் சிரிக்கிறது.

1 comment: