Thursday, November 15, 2012

சாதிய வன்மங்களைத் துடைத்தெறிவோம்!


பி. சம்பத்,
மாநிலத்  தலைவர்,
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி

 


தர்மபுரி மாவட்டம், நத்தம், கொண்டாம் பட்டி, அண்ணாநகர் ஆகிய கிராமங்களில் தலித்துகள் மீது சாதிய சக்திகள் நடத்தியுள்ள வன்முறை வெறியாட்டம் ஜனநாயக சக்தி களின் மனசாட்சியை உலுக்கும் சம்பவங் களாகும். இக்கிராமங்களில் சுமார் 300 வீடுகள் மீது கொடூரமான தாக்குதல்கள் நடந்துள்ளன. அடைத்துள்ள வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் உள்ள நகை கள், பணத்தை கொள்ளையிடுவது, விலை உயர்ந்த பிரிட்ஜ், கட்டில், மின்விசிறி, கேஸ் அடுப்பு போன்றவற்றை உடைத்து நொறுக்குவது, தானியங்கள், துணிகள், இதர பொருட்களை தீயிட்டுக் கொளுத்துவது, இறுதியாக பெட் ரோல் ஊற்றி வீட்டிற்கு நெருப்பு வைப்பது என மிகவும் திட்டமிட்ட முறையில் ஒரே மாதிரி யாக 300 வீடுகளிலும் நடந்தேறியுள்ளன.


வாழ்க்கையை பறிகொடுத்தவர்களாக

சேதாரத்தை துல்லியமாக இனிமேல்தான் மதிப்பிட வேண்டியுள்ளது என்றாலும் உத் தேசமாக பல பத்துகோடி ரூபாய்க்கு பாதிப்பு இருக்கும் என்பதில் ஐயமில்லை. பெங்களூர், திருப்பூர் என பல ஊர்களுக்குச் சென்று சிறு கச் சிறுகச் சேகரித்த உடைமைகள் முழுவதும் சாதி வெறியர்களால் கொள்ளையிடப்பட்டும், சூறையாடப்பட்டும் உள்ளன. தலித்துகளின் உயிர்களைத் தவிர உடைமைகள் முழுவதும் இக்கிராமங்களில் அழிக்கப்பட்டுள்ளன. வாழ்க்கையையே பறிகொடுத்தவர்களாக சொந்த கிராமங்களிலேயே அகதிகளாக மாறி யுள்ளனர். ஒரு தலித் பெரியவர் இத்தாக்குதல் பற்றி விவரிக்கும் போது “எங்களது வாழ்க்கை 50 ஆண்டுகளுக்கு பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது” என துயரத்துடன் கூறினார்.


தலித்துகளுக்கு எதிராக கட்டப்பஞ்சாயத்து கலகம்


இக்கொடூரமான தாக்குதலுக்கு காரணம் என்ன? 23 வயது நிரம்பிய தலித் இளைஞன் இளவரசன், 20 வயது நிரம்பிய சாதி இந்து பெண் திவ்யா, இவர்களிடையே காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டது தான்!. சாதிச் சமூகத்தில் இது மிகப்பெரிய குற்றமாம். அதுவும் கீழ்சாதி தலித் இளைஞன் உயர்சாதிப் பெண்ணை திருமணம் செய்தததற்காக அக் கிராமத்தில் உள்ள அனைத்து தலித் குடும் பங்களுக்கும் சாதி வெறியர்கள் தண்டனை வழங்கியிருக்கிறார்கள். கிராமத்தில் உள்ள “கட்ட(சாதி)ப் பஞ்சாயத்து” வழங்கியுள்ள தண்டனையாம் இது. இத்தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பாக அந்த இளம் தம் பதியை ஆஜர்படுத்துமாறு கட்டளையிட்டது இந்தக் கட்டப்பஞ்சாயத்து. இதன் நோக்கம் அறிந்த தம்பதியினர், தாங்கள் சேர்ந்து வாழ விரும்புகிறோம் என உறுதிபட தெரிவித்து வர மறுத்துவிட்டனர். இதன் பிறகு அம்பு திவ்யா வின் தந்தை நாகராஜ் மீது பாய்கிறது. பெண் ணை உருப்படியாக வளர்க்கவில்லை என அவர் மீது சாடுகிறார்கள். கேவலமான வார்த் தைகளால் திட்டுகிறார்கள். சாதிப் பெருமை யை கெடுத்துவிட்டதாக புலம்புகிறார்கள். இத் தகைய சாதி வெறியர்களின் அவதூறுகளைப் பொறுக்க முடியாமல் நாகராஜ் தற்கொலை செய்து கொள்கிறார்.பிறகு நாகராஜ் மரணத்திற்கான பழியும் தலித்துகள் மீது சுமத்தப்படுகிறது. தலித் இளைஞன் திருமணம் செய்து கொண்டதா லும் தலித் மக்கள் துன்புறுத்தியதாலும் தான் நாகராஜ் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி அவரது சடலத்தை பிரதான சாலையில் வைத்து சாலை மறியல் நடத்துகின்றனர். சாதி உணர்வைத் தூண்டிவிட்டு வெறியாக மாற்றி 2000 பேர் திரட்டப்படுகின்றனர். கையில் உருட்டுக்கட்டைகளோடும், பெட்ரோல் பாட்டில்களோடும் திட்டமிட்டு தலித் குடி யிருப்புகளுக்குள் நுழைகின்றனர். நத்தம், கொண்டாம்பட்டி, அண்ணாநகர் தலித் இளை ஞர்கள் வேலை நிமித்தம் பெங்களூர், திருப்பூர் போன்ற நகரங்களுக்குச் சென்ற நிலையில் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் மட்டுமே கிராமங்களில் இருந்தனர். வெறி கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் வருவதைக் கண்டு அவர்கள் அஞ்சி உயிரைப் பாதுகாக்க அவசர அவசரமாக ஓடி வெளியேறினர். இதன் பிறகுதான் ஊர்களுக்குள் புகுந்து நரவேட்டை யாடியுள்ளது சாதி வெறிக் கும்பல்.


இன்னொரு சம்பவம்

2 மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூர் அருகே சூரக்கோட்டை என்ற கிராமத்தில் மாரிமுத்து என்ற தலித் இளைஞன் உயர்சாதிக் குடும் பத்தைச் சேர்ந்த அபிராமி மீது காதல் கொண்டு, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சாதிய சக்திகளுக்கு அஞ்சி சென்னையில் ஊராருக்குத் தெரியாமல் வாழ்ந்தனர். ஒரு குழந்தையும் பிறந்தது. இதனை மோப்பம் பிடித்த அபிராமியின் சகோதரன் நயவஞ்சக மாகப் பேசி அவர்களுக்கு பாதுகாப்பு தருவதாக உறுதியளித்து கிராமத்திற்கு வரவழைத்தான். நம்பிக்கையோடு ஊர் திரும்பினர் தம்பதியி னர். இந்நிலையில் தலித் இளைஞனிடம் மனம் குளிர பேசி வரவழைத்து, ஊருக்கு வெளியே அழைத்துச் சென்று கண்ட துண்ட மாக வெட்டிப் போட்டனர். தலை, கை, கால் கள், ஆணுறுப்பு என ஒவ்வொன்றும் தனித் தனியாக வெட்டி எறியப்பட்டன. அபிராமியும் குழந்தையும் நிராதரவானதோடு அக்கிராம தலித் மக்கள் ஒட்டுமொத்தமாக அச்சுறுத்தப் பட்டனர். தஞ்சை நகர மக்களை உலுக்கிய படுகொலையாகும் அது.


சாதியமைப்பின் கேடயமா பெண்?


இக்காலத்தில் நாடு முழுவதிலும் தமிழகத் திலும் சாதி மறுப்புத் திருமணத்திற்கு எதிராக இத்தகைய படுகொலைகள் நடக்கின்றன. இதனையொட்டி தலித் மக்கள் மீது பல தாக்கு தல் சம்பவங்களும் நடந்துள்ளன. மனித சமு தாயம் வெட்கித் தலைகுனிய வேண்டிய அநா கரீகச் சம்பவங்களாகும் இவை. இச்சம்பவங் களில் சாதி அடிமைத்தனம் மட்டுமல்ல, பெண், அடிமைத்தனமும் அடங்கியுள்ளது. ஆம். பெண் சாதியமைப்பின் கேடயமாக கரு தப்படுகிறாள். சாதியமைப்பை பாதுகாக்க வேண்டுமென்றால் பெண்கள் சாதி வரம்பு மீறி திருமணம் செய்து கொள்ளக் கூடாது. மீறி திரு மணம் செய்தாலோ அல்லது அதை அனுமதித் தாலோ சூரக்கோட்டை, நத்தம், கொண்டாம் பட்டி, அண்ணாநகர் சம்பவங்களும், ஏன் நாக ராஜ் மரணம் போன்ற சம்பவங்களும் நடந் தேறும் என்பதுதான் சாதி வெறியர்களும், சாதி யமைப்புகளும் உணர்த்தும் செய்தியாகும்.

சாதியமைப்புகளின் சவால்

இச்சம்பவங்களுக்குப் பின்னணியாக தமிழகத்தில் சாதியமைப்புகள் அரங்கேற்றிய சில சம்பவங்களைக் கவனிக்க வேண்டும். பாமக தலைவர்களில் ஒருவரான காடுவெட்டி குரு, சாதி மீறி திருமணம் செய்து கொள் வதற்கு எதிராக பகிரங்கமாக மிரட்டல் விடுத் தார். பத்திரிகைகளும் இதனைச் செய்தியாக வெளியிட்டன. இதைபோல கொங்கு வேளா ளக் கவுண்டர் பேரவை திருப்பூரில் கூடி, சாதி, மத கலப்புத் திருமணத்திற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டதாகவும், அப்பேரவையில் கொங்குச் சட்டம் ஒன்றை இயற்றிக் கொண்டதாகவும் அதன்படிதான் கொங்கு வேளாளர்கள் செயல்பட வேண்டு மென்றும், இதோடு பெண்களுக்கு சொத்துரி மை வழங்கக்கூடாது எனவும் தீர்மானம் நிறை வேற்றியதாகவும் பத்திரிகைச் செய்திகள் வெளிவந்தன. இவ்வாறு சட்டத்திற்கும் அமைதிக்கும் பங்கம் விளைவிக்கக் கூடிய சக்திகள் மீது அரசு நிர்வாகமும், காவல்துறை யும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வன்மையான கண்டனத்திற்குரியது. இக்காலத்தில் சில சாதியமைப்புகள் வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்தை வாபஸ் பெறும் படியும் தீர்மானம் நிறைவேற்றி தலித்து களுக்கு எதிரான தங்களது நிலைபாட்டை பறைசாற்றிக் கொண்டன. 


சாதிய வன்மங்களை சவக்குழிக்கு அனுப்புவோம்

மறுபுறம் ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்த காரணத்திற்காக மதுரையிலும், பரமக்குடி யிலும் எந்தத் தவறும் செய்யாத அப்பாவிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். கணக்கு தீர்ப்பது என்பது சாதிய வன்மங்களின் வெளிப் பாடாகும். மிருகத்தனமான இத்தகைய தாக்கு தல்கள் வன்மையான கண்டனத்திற்குரி யவை. சாதிய பெருமை பேசுவதும், சாதிய வன்மங்களைக் காட்டுவதும் தமிழகத்தில் தொடர்கதையாய் நிகழ்வது வேதனைக் குரியது. சாதிய வன்மங்களுக்கு முடிவு கட்ட வும், ஜனநாயகச் சூழலைப் பலப்படுத்தவும் இடதுசாரி மற்றும் ஜனநாயக இயக்கங்கள் திட்டமிட்டு செயல்படுவது அவசியமாகும்.


திராவிடக் கட்சிகள்
தமிழகத்தில் 45 ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகள் மாறி, மாறி அதிகாரத்தில் இருந்துள்ளன. சாதிய ஒடுக்கு முறைகளுக்கு இவை முடிவு கட்டத் தவறியுள் ளன. குறுகிய அரசியல் ஆதாயத்திற்காகவும், வாக்கு வங்கி நோக்கத்திற்காகவும் அவ்வப் போது சாதிய உணர்வுகளையும், சாதிய அமைப்பு களையும் இவை பயன்படுத்தி வந்துள்ளன. பெரியாரின் வாரிசுகள் என்று கூறிக்கொண்டே பெரியாரின் சமூக நீதிக் கருத்துக்களை குழி தோண்டி புதைத்துள்ளனர். காங்கிரஸ் உள் ளிட்ட இதர முதலாளித்துவக் கட்சிகளும் சாதி உணர்வையும் பயன்படுத்துவதில் தாங் கள் சளைத்தவர்கள் அல்ல என்பதையே அனுபவம் உறுதிப்படுத்துகிறது.


காவல்துறை செயல்பாடு

சாதிய சக்திகள் சட்டத்திற்கு சவால்விடும் சம்பவங்களில் காவல்துறையின் நடவடிக் கைகள் ஏற்க முடியாதவையாகும். நத்தம், கொண்டாம்பட்டி, அண்ணாநகரில் சுமார் 5 மணி நேரம் தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் எவ்வித தலையீடும் செய்யவில்லை. தங் களுக்குத் தெரியாது என்பதையோ, போதுமான காவலர்கள் இல்லை என்பதையோ நம்பு வதற்கு இல்லை. காவல்துறையை பலப் படுத் தவும், நவீனமயமாக்கவும் ஏராளமான பணம் செலவிட்டுள்ளதாக தமிழக முதல்வர் தெரி வித்துள்ள நிலையில், தர்மபுரி மாவட்ட சம் பவங்கள் வெட்கக் கேடானவையாகும். காவல்துறை அதிகாரிகள் சிலரும் சாதிய உணர்வுடன் செயல்பட்டுள்ளனர் என்ற கருத் தை புறக்கணிக்க முடியாது. தர்மபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பளார் மதுரை மாவட்டப் பணிக்கு சென்றுள்ள பின்னணி யில் தலித் குடியிருப்புகள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடந்துள்ளன. அவர் தர்மபுரி திரும்பிய பிறகுதான் நிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 100க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைத்துக் குற்றவாளி களும் கைது செய்யப்பட்டு உரிய முறையில் தண்டிக்கப்படுவது அவசியமாகும். இதோடு தாக்குதல் நடைபெற்ற போது செயல்படாத காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக் கை எடுப்பது அவசியமாகும். எதிர் காலத்தில் இத்தகைய சம்பவங்களைத் தடுக்க இவை இன்றியமையாத தேவையாகும்.


தமிழக அரசின் அணுகுமுறையும் - கடமைகளும்


தலித் மக்கள் அனைத்தையும் இழந்து நிற் கின்றனர். குடும்பம் ஒன்றுக்கு ரூ. 50 ஆயிரம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு போதுமான தல்ல. அவர்களது இழப்பிற்கு முழு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். வீடுகள் முழுவதும் சேத மடைந்த பின்னணியில் தலித் மக்களின் வீடு களை புனரமைத்துத் தர வேண்டும். மாணவ - மாணவிகள், இளைஞர்களின் கல்விச் சான்றிதழ்கள், ரேசன் கார்டுகள், உடைமை களுக்கான ஆவணங்கள் அனைத்தும் நெருப் பில் பொசுக்கப்பட்டுள்ளன. இவை அனைத் தும் காலதாமதமின்றி திரும்ப வழங்கிட வேண் டும். (இழப்புகள் மற்றும் ஆவணங்கள் அழிப்பு குறித்து நாம் மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளரிடம் தெரிவித்த அடிப்படையில் சிறப்பு முகாம் நடத்தி மக்களிடம் விண்ணப் பங்கள் பெறப்பட்டுள்ளன)
வர்க்கமாக அணிதிரள்வோம்!


பாதிக்கப்பட்ட தலித்துகள் அனைவரும் உழைப்பாளிகள். சமூக ரீதியாகவும், பொருளா தார ரீதியாகவும் ஒடுக்கப்பட்டவர்களாக தலித் துகள் உள்ளனர் என்பதை இச்சம்பவமும் உறுதிப்படுத்துகிறது. எனவே இவர்களின் பிரச்சனை என்பது உழைக்கும் வர்க்கத்தின் பிரச்சனையேயாகும். இக்கண்ணோட்டத்தின் அடிப்படையில் சாதிய சக்திகளின் தாக்குதல் களுக்கு எதிராக அனைத்து உழைப்பாளி மக்க ளும் அணிதிரள்வது உழைக்கும் வர்க்க ஒற்று மைக்கு அவசியமானதாகும். தர்மபுரி மாவட்டத் தில் தலித்துகள் மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்ட பிரிவினைச் சார்ந்த கணிசமான மக்களும் உழைப்பாளி மக்களே ஆவர். இரு தரப்பின ரின் பொருளாதார நிலையும் பின் தங்கிய தாகவே உள்ளது. வர்க்கம் என்ற முறை யில் இவர்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டியவர் கள். ஆனால் சாதிய சக்திகள் உள்ளே நுழைந்து, இவர்களுக்குள் உயர்ந்தவர் என்றும் தாழ்ந்த வர் என்றும் பிணக்குகளை ஏற்படுத்தி வரு கின்றன. சாதிய ஒடுக்குமுறைகளை ஏவிவிடு கின்றன. இருதரப்பு உழைப்பாளி மக்களும் ஜனநாயக சக்திகளும் இதற்கு இடம் தரக் கூடாது. சாதியமைப்புகளையும் சாதியத் தலைவர்களையும் புறந்தள்ளி, மக்கள் ஒற்று மையை நிலைநாட்ட வேண்டும். தர்மபுரி மாவட்டத்திற்கு மட்டுமல்ல, தமிழகம் முழு வதற்கும் இது பொருந்தக் கூடியதாகும். சமூக நல்லிணக்கத்திற்கு மட்டுமல்ல, உழைக்கும் வர்க்க ஒற்றுமைக்கும் இது முன்தேவையாகும்.

நன்றி
தீக்திர்  15.11.2012

1 comment:

  1. நீங்கள் இடதுசாரிகள் அல்ல இடதுதலித் சாரிகள் அதனால்தான் என்போன்றவர்கள் எப்பொழுதோஅங்கிருந்து வெளிவந்துவிட்டோம் , மா.குமார் , விழுப்புரம் .

    ReplyDelete