ஜாதி
மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் ஆதிக்க சக்திகளால் மிகவும் மோசமான
முறையில்  தாக்கப்பட்ட தர்மபுரி நத்தம்
காலனி தலித் மக்களுக்கு நியாயம் வழங்கவும் வன்முறையாளர்கள் மீது கடுமையான  நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி,
கண்டன
ஆர்ப்பாட்டம்
நாள் 16.11.2012 வெள்ளிக் கிழமை, மாலை 5 மணி
இடம் : அண்ணா
கலை அரங்கம் அருகில், வேலூர்
தர்மபுரி மாவட்டம் செல்லன் கொட்டாய் பகுதியைச்
சேர்ந்த பெண்ணும் நத்தம் காலனியைச் சேர்ந்த ஒரு பையனும் ஜாதி மறுப்பு திருமணம்
செய்து கொண்டனர்.  ஆதிக்க சக்திகளைச்
சேர்ந்த கட்டப் பஞ்சாயத்துக்காரர்களால் இந்த காதல் ஜோடியை பிரிக்க முடியவில்லை. 
இதனால் ஆத்திரமுற்ற ஆதிக்க சக்திகள் நத்தம்
காலனியில் உள்ள 268 தலித் மக்களின் வீடுகளை அடித்து நொறுக்கி, தானியங்கள், மற்ற
உடமைகள், வாகனங்கள், பள்ளிக்குழந்தைகளின் பாடப் புத்தகங்கள், ரேஷன் கார்டுகள்
ஆகியவற்றை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டனர். அவர்களது பணம், நகைகள்,
ஆடு, மாடுகள், ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.
தீண்டாமை வன் கொடுமைச் செயலான இந்த அராஜகத்தில்
ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க,
பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு முறையான
இழப்பீடு வழங்க,
அவர்கள் தங்களது இருப்பிடங்களில் மீண்டும்
வாழ்ந்திட பாதுகாப்பு வழங்கிட வற்புறுத்தி,
இது போன்ற சம்பவங்கள் எங்கும் நடக்காமல்,
அமைதியை உருவாக்கிட  
தமிழக அரசினை வற்புறுத்தி 
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில்
நடைபெறுகின்ற 
கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பீர்,
உரிமைக்குரல் எழுப்பிடுவீர்
தலைமை
தோழர்
வி.குபேந்திரன், மாவட்டத் தலைவர், த.தீ.ஒ.மு
கண்டன
உரை
ஜி.லதா,                       பி.சக்திவேல்,               சி.ஞானசேகரன் 
மாநில
துணைத்தலைவர்   மாவட்டச் செயலாளர்     பொருளாளர்
எஸ்.ராமன்,
A.I.I.E.A   எஸ்.டி.சங்கரி, A.I.D.W.A.
எம்.காசி, CITU
வி.ஈ.ஏகநாதீஸ்வரன்,
துணைத்தலைவர்    எல்.சி.மணி, துணைத் தலைவர், 
அருள்
ஸ்ரீனிவாசன், துணைத்தலைவர்,     சி.சரவணராஜ், TNGEA,  
கே.சாமிநாதன்,
வி.தொ.ச,                    எம்.சுப்ரமணியன்,
TNMSRA
முகில்,
தமுஎகச,        எம்.கோவிந்தராஜ், COTEE,     சி.சரவணன், TNPTF
சி.பலராமன்,
SEWA, BSNL    எம்.சிட்டிபாபு, அரசு ஊழியர் ஐக்கிய பேரவை, 
ஐ.ஜார்ஜ்,
CMCEU,     எம்.ஞானவேல்,      DYFI,        தி.வ.தனுஷ், SFI,
கே.ஏ.வரதராஜன், தமிழ்நாடு அருந்ததியர் சங்கம்,
அனைவரும்
அவசியம் பங்கேற்பீர், ஆதரவு தாரீர்
இவண்
        தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி
                            வேலூர் மாவட்டக்
குழு
 
 
No comments:
Post a Comment